யோசிச்சுப் பாரு, இதெல்லாம் வேண்டாம்னு தோணும்!”
அதான் என் பிரச்சனையே சத்யா. தினேஷ் என் வாழ்க்கைல வேணும்னு ஒரு பக்கம், வேணாம்னு ஒரு பக்கம், என் இரண்டுக்கும் நடுவில மனசு கிடந்து அல்லாடுது. யோசிச்சு யோசிச்சு ஒரு முடிவும் தெரியாம சில நேரம் செத்துப் போய்டலாம்னு தோணுதுடி.
ஐயோ லூசு என்ன இப்படிலாம் பேசுற?. சத்யா அவளை உலுக்க
ஆமா சத்யா. நான் லூசு மாதிரி தான் ஆயிட்டேன். எவ்ளோ பொண்ணுங்க காலேஜ்ல இருக்காங்க. என்கிட்டே ஏண்டி லவ் பண்றேன்னு வந்து சொன்னான். ஏன்னு தெரியல! விதி! அது தான் விதி! அதுக்கு முன்னாடி என்னோடு நினைவில் அவனை ஏறெடுத்துக் கூட நான் பார்த்தது இல்ல. அன்னிக்கு அவனைப் பார்த்த பின்னர், எங்கே பார்த்தாலும் அவனை மட்டும் தான் பார்க்கிற மாதிரி தோணுது. இனி அவன் இல்லாம வாழ்க்கையே இல்லைன்னு தோணுது. அன்னிக்கு நான் அவனை வேண்டாம்னு சொன்னதால், திரும்ப நான் அவனைத் தேடித்போனால், அவன் என்னை வேண்டாம்னு சொல்லிருவானோன்னு ஒரு பயம் வேற என்னை வாட்டுது. ஆனால் என்னோட மனசில் இருக்கிறதை அவன்கிட்ட சொல்றதில் தான் என்னோட எல்லாப் பிரச்சினைக்கும் தீர்வுன்னு தோணுது. காதல் என்ன அவ்ளோ பெரிய குற்றமா? எப்படியும் யாரோ ஒருத்தரை கல்யாணம் பண்ணத் தான் போறோம். அது நம்மளைப் பிடிச்சு நேசிச்சு வர்றவங்களை நாமும் நேசிச்சு ஏத்துக்கிறதில் என்ன தப்பு இருக்கு.? படபடவென்று பேசித் தள்ளிய ரம்யாவைப் பார்த்து வியந்து நின்றாள் சத்யா.
கொஞ்சம் நிதானப்படுத்திக் கொண்ட ரம்யாவின் தோள்களைத் தொட்டு,
இவ்வளவு பேசறியே அவன் ப்ரொபோஸ் பண்றதுக்கு முன்னாடி அவன் பெயராவது தெரியுமாடி உனக்கு?
தெரியும்! அவன் பெயர் தெரியும்! என்னோட இன்னொரு ப்ரென்ட் மூலம் தெரியும் சத்யா!
பெயர் மட்டும் தெரிஞ்ச ஒருத்தனைக் காதலிக்கிறேன்னு சொல்றியே? உனக்குப் பைத்தியமா புடிச்சிருக்கு?
ஆமா! எல்லாத்தையும் தெரிஞ்சு தான் காதல் வரணும்னு இல்லை! அதுக்கு ஒரே ஒரு பார்வை கூட போதும்!
அச்சச்சோ ரம்யா! என்ன இப்படிலாம் பேசுற!
நானா இதெல்லாம் பேசல சத்யா. அவன் மேல இருக்கிற இந்த பைத்தியமான உணர்வு தான் என்னைப் பேசவைக்குது.
எப்படி ரம்யா அவனை உனக்கு இப்படிப் புடிச்சது?
“ஏன் புடிச்சது, எதுக்குப் புடிச்சதுன்னு என்னால் சொல்ல முடியல. சொல்லத் தெரியல. அவன் என்னைத் தேடித்தேடி வந்ததை நான் உணராமல் இருந்தேன்னு சொன்னேன். ஆனால்