சரியாயிருக்கும்!...தரகர் கூட அதைத்தான் சொல்லிட்டுப் போனார்!”
யோசித்த பார்வதி, “ம்ம்ம்ம்...அது ஒண்ணும் பிரச்சினையில்லை!...நானே பேசிடுவேன்!...பெரியவ கொஞ்சம் பக்குவக்காரி!...எடுத்துச் சொன்னாப் புரிஞ்சுக்குவா!...ஆனா சின்னவதான் கொஞ்சம் “காச்...மூச்”சுன்னு கத்துவா!...ப்ச்..பரவாயில்லை...சமாளிக்கலாம்!” பார்வதி நம்பிக்கையுடன் சொன்னதில் தேவநாதனுக்கு லேசாய் நம்பிக்கை துளிர்த்தது.
அதே நேரம் அடி மனசுக்குள் வேறொரு பயமும் ஏற்பட்டது, “பெரியவகிட்ட ஏதோ குறைபாடு இருக்கும் போலிருக்கு அதான் அவளை விட்டுட்டு சின்னவளுக்கு கல்யாணம் பண்றாங்க!ன்னு உலகம் நெனச்சிட்டா...பெரியவளுக்கு அப்பப்ப வந்து போயிட்டு இருக்கற ஒண்ணு ரெண்டு வரன்களும் வராமலே போயிட்டா?”
“என்னங்க...திடீர்னு அமைதியாயிட்டீங்க?...என்ன யோசனை?” இத்தனை வருட தாம்பத்தியத்தில் கணவனின் முகத்தை வைத்தே அவன் மனதில் ஓடும் எண்ணங்களைப் புரிந்து கொள்ளக் கூடியவளான பார்வதி கேட்டாள்.
தேவநாதன் தன் மன அச்சத்தை அவளிடம் கூற, “த பாருங்க...ஆண்டவன் அவளுக்குன்னு ஒருத்தனை படைக்காமலா போயிருப்பான்?...நிச்சயம் படைச்சிருப்பான்!...அவன் உடனே வந்து நம்ம பொண்ணைக் கட்டிக்கணும்னு நாம நெனச்சா?...நம்ம அவசரத்துக்கு எதுவும் நடக்குமா?...அதுஅதுக்குன்னு ஒரு காலம் நேரம் வரணுமல்ல?...இப்ப அர்ச்சனாவுக்கு நேரம் வந்திருக்கு!...அடுத்து சுலோச்சனாவுக்கு வரும்!..”
மனைவியின் நம்பிக்கையைப் பார்த்து வியந்தார் தேவநாதன்.
தொடரும்...
Next episode will be published on 28th Nov. This series is updated weekly on Saturdays.