ஆராயும் பார்வையுடன் சந்தியா அவளையே பார்த்துக்கொண்டு இருந்த சந்தியா ஜனனி வாய் திறக்காததை கண்டு பொறுமை இழந்து தெரிந்ததை சீக்கிரம் சொல்லேன்டீ...
தனுவோட அப்பா தான்...
நினைத்தேன்... எல்லாம் இந்த வீணாப்போன ஸ்வீனா ஐடியாவாத்தான் இருக்கும் என்று சொல்லிக்கொண்டு இருக்க வீணா போன ஸ்வீனா... ரைமிங்கா இருக்கு... செம! போங்க என்றவாறே உள்ளே நுழைந்தாள் இளம்பெண் ஒருத்தி.
யார் இவள் என்ற கேள்வியுடன் ஜனனியை பார்க்க நானே சொல்கிறேன் சந்தியா அக்கா. வீணாப்போன ஸ்வீனாவோட செல்ல தங்கை ஸ்வப்னா... என் பெயர் எப்படி இருக்கு? நான் எப்படி இருக்கிறேன்? என்று சிரித்துக் கொண்டே கேட்க அவளை முறைத்துப் பார்த்தவள் நான் ஸ்வீனாவை பார்க்க வேண்டும் என்றாள்.
அவள் முறைத்ததைப் பொருட்படுத்தாமல் இதெல்லாம் முன்னரே எதிர்பார்த்தது தான் என்பது போல தனா அண்ணா கூட அக்கா வெளியே போயிருக்காங்க. இன்னும் பத்து நிமிஷத்தில் வந்து விடுவார்கள். இன்னும் இரண்டு மணி நேரத்தில் மேரேஜ் பங்க்ஷன். சீக்கிரம் கிளம்புங்க என்று சொல்லி விட்டு அங்கிருந்து ஓடாத குறையாக வெளியே சென்றுவிட்டாள் ஸ்வப்னா.
ஜனனி... எதுக்கு இந்த அவசர கல்யாணம்.
இது அவசர கல்யாணம் இல்லை... அவசிய கல்யாணம்.
அதுதான்... ஏன் எங்கிட்ட கூட சொல்லாமல்...
சந்தியா... எப்படியும் நான் யாரையும் திருமணம் செய்து கொள்ளப் போவதில்லை. அதனால் தனுக்கு அம்மாவாக மட்டும் இருக்கலாம் என்று... உன்னிடம்சொன்னால் நீ ஒத்துக் கொள்ள மாட்டாய் என்று எனக்கு தெரியும். அதனாலதான் உன்னை கடைசி நிமிடத்தில் இங்கு வரவழைத்தேன்.
.... சந்தியா பதில் எதுவும் பேசாமல் அமைதியாக அமர்ந்திருந்தாள்.
ஸ்வீனாவால் தனுவை பார்த்து கொள்ள முடியவில்லை. ஸ்வீனாவிற்கும் திருமணம் நிச்சயமாகி விட்டது. இனி அவளது வாழ்க்கையும் அவள் பார்க்க வேண்டும். தனு தாய் பாசத்திற்காக ஏங்குகிறாள். அவளின் அம்மா ஒரு விபத்தில் இறந்து போய் விட்டார்களாம். ஒருநாள் பேசிக்கொண்டிருக்கும்போது தனுவாகத்தான் என்னிடம் கேட்டாள். எனக்கு அம்மாவாக ஜானு நீங்க வாங்களேன் என்று. அதன் பிறகு நிறைய நடந்தது. எல்லாம் சொல்ல இப்போது நேரமில்லை. நான் தனுக்கு நல்ல அம்மாவா இருப்பேன் சந்தியா. நான் எதிர்பார்த்து எனக்கு கிடைக்காத சந்தோஷம் நிச்சயம் தனுவிற்கு கிடைக்க வேண்டும்.
தனுக்கு நல்ல அம்மாவா இருப்ப... ஓகே தான்.. உங்க பாஸ்க்கு நல்ல வொய்ப்பா இருக்க