வாழ்வில் மீண்டும் ஒரு சலிப்பு வந்து தொற்றிக் கொள்ள அந்த சூழலில் தான் தனு அம்மாவாக என் கூடவே இருக்கிறீர்களா என்று கேட்டுவிட்டாள்.
எது எப்படியோ சம்மதித்து விட்டேன். இனி அந்த குழந்தையை ஏமாற்ற மாட்டேன் என்று சொல்லும்போது அவள் கட்டளையை தாண்டி அவன் முகம் மீண்டும் கண்முன் தோன்ற அவளை மறந்து அவள் உதடுகளில் புன்னகை மலர்ந்தது. அதோடு அவன் ஸ்வேதா... ஸ்வேதா... என்று புலம்பியது நினைவு வர மலர்ந்த உதடுகள் வாடிய பூ போல சுருங்கி போனது. இது எதையும் கவனிக்காமல் பேசிக்கொண்டிருந்த சந்தியா நான் இப்போவே போய் ஸ்வீனாவைப் பார்த்து கல்யாணத்தை நிறுத்துகிறேன் என்று சொல்லிவிட்டு வெளியே செல்ல அப்போதுதான் சுய நினைவிற்கு வந்தாள் ஜனனி.
இவ்ளோ நேரம் இவள் என்ன பேசினாலோ தெரியவில்லையே என்று யோசித்தவள் சந்தியா ஸ்டாப்... என்று கத்திக்கொண்டே வெளியே வர அதற்குள் சந்தியா அந்த ஸ்வப்னாவை அழைத்துக்கொண்டு ஸ்வீனாவை நோக்கி செல்வது தெரிய அவர்களே பேசித் தீர்த்துக் கொள்ளட்டும் என்று உள்ளே திரும்ப அந்த நேரத்தில் மேக்கப் போட வேண்டும் என்று சொல்லிக்கொண்டே இரு பெண்மணிகள் அழைக்க அவளும் அவர்கள் பின்னே சென்று விட்டாள்.
ஹாய் சந்தியா.... என்றாள் ஸ்வீனா.
மனதில் என்னதான் நினைத்துக் கொண்டிருக்கிறீர்கள்... என்று அவள் மனதில் இருந்த கோபத்தை வெளியே காட்ட யார் ஸ்வீனா இது... என்று மிக அருகில் கேட்டது ஒரு ஆண்குரல். அந்த குரலில் இருந்த திமிரும் ஆணவமும் சந்தியாவிற்கு பிடிக்கவில்லை. அதனால் அவன் யாரென்று திரும்பிப் பார்க்கவும் அவளுக்கு விருப்பம் இல்லாமல் அப்படியே நின்றாள்.
இவங்க சந்தியா... ஜனனி ப்ரண்ட் என்று அவனிடம் சொல்லிய ஸ்வீனா சந்தியா இவங்க தான் என்னோட தனா அண்ணா... அதாவது ஜனனி கல்யாணம் செய்துகொள்ள போறவங்க என்றாள்.
ஓ.... என்ற சந்தியாவின் குரலில் கேலி நிறைந்திருக்க ஜனார்த்தனனுக்கு கோபம் பொங்கி வந்தது. ஆனால் பல்லை கடித்துக்கொண்டு பொறுத்துக் கொண்டு நின்றான்.
அப்படி என்றால் மிஸ்டர் தனவந்தன் என்று சொல்லுங்கள் என்றால் சந்தியா திரும்பிப் பார்க்காமலே.
ஸ்வீனா யோசனையாக சந்தியாவை பார்த்துக்கொண்டிருக்க ஜனார்த்தனன் ஐ யம் ஜனார்த்தனன் சன் ஆப் தனவந்தன் என்றாக என்றான் நக்கலாக. அவன் கூறிய விதத்தில் நீ புரிந்து இருப்பது அனைத்தும் தவறு என்று குத்திக் காட்டுவது போல இருந்தது சந்தியாவிற்கு.
ஆனால் ஜனார்த்தனன் என்ற பெயரைக் கேட்டதும் அவனின் ஆணவம் திமிர் நக்கல் கேலி