வேண்டாமா? ஏன் உங்க பாஸை நீ கல்யாணம் செய்தால் நீங்கள் மிஸஸ் தனா ஆக மாறி உங்கள் கடமையை செய்ய வேண்டுமே அதை மறந்து விட்டீர்களா...
சந்தி... இதென்ன பேச்சு. தனு அப்பாவுக்கும் திருமணம் செய்து கொள்வதில் விருப்பம் இல்லையாம். அவரும் தனுக்காக தான் திருமணம் செய்து கொள்கிறார். அதனால் நான் தனுக்கு அம்மாவாக இருந்தால் மட்டும் போதும் என்று சற்று கோபமாகவே பதில் கூறினார் ஜனனி.
சொன்ன வார்த்தையை அப்படியே காப்பாற்றுவார் என்று நம்பிக்கை... பலே.. சரி இதை அந்த ஆளே உன்னிடம் சொன்னானா... சாரி சாரி சொன்னாரா...
இல்லை சந்தி. நான் அவரை பார்க்கவும் இல்லை பேசவும் இல்லை. ஸ்வீனா தான் சொன்னாள்.
ஸ்வீனா... ஸ்வீனா... ஸ்வீனா... அந்த சீனா எது சொன்னாலும் அதை அப்படியே நம்பி விடுவாயா. சீனாவும் ஸ்வீனாவும் ஒன்று தான் போல... என்று முறைக்க இதைப் பார்.. இது ஒப்புதல் பத்திரம் என்று நீட்டினாள் ஜனனி.
அதை படித்து பார்த்த சந்தியா ஆத்திரத்தில் கத்தினாள். அதற்குள் ஜனனி வேகமாக சென்று கதவை தாழிட்டுவிட்டு வந்தாள்.
முட்டாள் மாதிரி பேசாத ஜனனி... இன்னைக்கு தனுக்காக நீங்கள் ஏற்றுக்கொள்ளலாம். நாளைக்கு அந்த ஆள்க்கு நீ தேவை பட்டால் என்ன செய்வாய். அவன் நல்லவனா என்றாவது நீ தெரிந்து கொண்டிருக்க வேண்டாமா?... சரி அவரை பற்றி பேச வேண்டாம். உன்னை பற்றி யோசித்து பார்.
திருமணம் என்பது ஒரு கொள்கை இல்லை, அது ஒரு உறவு....
ஒப்புதல் பத்திரத்தினால் ஏற்படும் ஒரு சொத்து இல்லை, மனதால் ஏற்படும் ஒரு சொந்தம்....
திருமணம் என்பது ஒருவருக்கு செய்யும் உதவி இல்லை, அது ஒரு வரம்... வாழ்க்கையையே வசந்தமாக்கும் வரம்...
நீங்களெல்லாம் என்ன நினைத்து செய்கிறீர்கள். ஏதோ குழந்தைகள் செய்யும் விளையாட்டு போல திருமணத்தை நடத்திக் கொண்டிருக்கிறீர்கள். திருமணம் என்பது இரு மனங்கள் இணையும் ஒரு உன்னதமான உறவு. உங்களுக்கு அது எல்லாம் விளையாட்டாகத் தெரிகிறது போல....
சிறு வயதில் இருந்தே நீ அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பாயே, என்னவன் என்னை தேடி வருவான் என்று நம்பிக்கையோட சொல்லிக் கொண்டிருப்பாயே... அந்த நம்பிக்கையை எங்கே போனது. எனக்காகவே ஒருவன் பிறந்திருக்கிறான் என்று கற்பனைக்கு உருவம் கொடுத்து உன் மனதில் அவன் உருவத்தை செதுக்கி வைத்து ஒரு நம்பிக்கையோடு காத்திருந்தாயே...