இருக்கா.... என்னாச்சு மேடம்... ஏன் திடீர்ன்னு மைத்தி இப்படி ஒரு முடிவேடுத்தா....”, கண்ணன் கேட்க அங்கிருந்த அனைவரும் அவரை அதிர்ந்து பார்த்தார்கள்...
கோவிலுக்கு சென்று தன் தந்தை பெயரில் அர்ச்சனை செய்து அப்பொழுதுதான் உள்நுழைந்த மைத்தி அங்கு கண்ணன் அமர்ந்திருப்பதை பார்த்து என்ன விஷயமாக இருக்கும் என்று யோசனையுடன் வீட்டினுள் சென்று தன் தந்தைக்கு பிரசாதத்தை வைத்துவிட்டு மற்றவர்க்கு கொடுக்க முற்றத்திற்கு வந்தாள்....
“மைத்தி கண்ணன் சார் சொல்றதெல்லாம் நிஜமா....”,சியாமளா கடுமையுடன் கேட்க. மைத்திக்கு எதை பற்றி கேட்கிறார் என்று புரியா நிலை...
“என்ன கேக்கறேம்மா... நேக்கு புரியலை...”
“உன்னோட கோச்கிட்ட இனி ப்ராக்டிஸ் பண்ண வர மாட்டேன்னு சொல்லிட்டியாமே... அதே மாதிரி பாஸ்கர் சார்க்கிட்ட வேலை வேணும்ன்னு கேட்டியாமே....”, சியாமளா கேட்க, அதற்குள் விஷயம் தெரிந்துவிட்டதா என்று கையைப் பிசைந்தாள் மைத்தி....
“அது வந்தும்மா... நானே இப்போ நன்னா போட ஆரம்பிச்சுட்டேன்... அதனால எனக்கு கோச்சிங் தேவைப்படாது... அப்பறம் சாயங்காலம் சும்மாதானே இருக்கேன்... அதுதான் அங்க வர்ற பசங்களுக்கு சொல்லித்தரலாம்ன்னு கேட்டேன்ம்மா... வேற ஒண்ணும் இல்லை....”
“பத்ரி போன வராம் நீங்க பாஸ்கர் சார் பார்க்க போனபோது அவர் என்ன சொன்னார்... அப்படியே சொல்லு...”
“அது அத்தை... மைத்திக்கு கண்டிப்பா கோச்சிங் வேணும்ன்னு சொன்னார்... அப்போத்தான் எந்த போட்டியா இருந்தாலும் செலக்ட் பண்ணுவான்னு சொன்னா....”
“இப்போ சொல்லு மைத்தி... எதுக்காக கோச்கிட்ட வரமாட்டேன்னு சொன்ன....”
“அம்மா ஏற்கனவே நீ ரொம்ப கஷ்டப்பட்டுண்டு இருக்க... இதுல என்னோட கிளாஸ் வேற... என்னோட ஆசைக்கு லண்டன் வரைக்கும் போய் விளையாடிட்டு வந்தாச்சு... அதுதான் போறும்....இனிமே இந்த கிரிக்கெட் போட்டிக்கு போற வேலை வேண்டாம்ன்னு நின்னுட்டேன்.... இப்போ நான் விளையாடறதை விட அப்பா உடம்புதான்ம்மா முக்கியம்... அதுக்கு இன்னும் நிறைய செலவு இருக்கு.... நீ சொல்லாட்டாலும் ஓரளவு என்னால புரிஞ்சுக்க முடியறது... நான் ஆசப்பட்டேன்னு உங்களுக்கு அதிகப்படியான செலவுன்னு தெரிஞ்சும் நீயும், அப்பாவும் என்னை அகாடமில சேர்த்து இந்தியாக்கு விளையாடற அளவுக்கு கொண்டு வந்திருக்கேள்... இதுவே பெரிசும்மா... இனியும் உங்களுக்கு கஷ்டம் கொடுக்க நான் விரும்பலை... ஆனா என்னால விளையாட இருக்கவும் முடியாது... அதுதான் பாஸ்கர் சார்க்கிட்ட வேலை கிடைக்குமான்னு கேட்டேன்.... “, மைத்தி கூற அங்கிருந்தவர்கள் அனைவருக்கும் கண்கள் கலங்கியது...