மிஸ்டர் கார்த்திக்..... என்று அந்த செவிலியர் அழைக்க......
திரும்பியவன் தலையில் இடி இறங்கியது.
தன் நெஞ்சில் உருவாகிகொண்டிருக்கும் வலியினை தடுக்கும் வலி தெரியாமல், விறு விறு நடையுடன் அந்த இடத்தை விட்டு நகர,
தேன்மொழியும், செவிலியரும் ஒருவரை ஒருவர் பார்த்து கொண்டனர். ஆம், தேன்மொழிக்கு அவன் யார் என்று கூட தெரியவில்லை.
அவன் கார் நிற்கும் இடம் சென்று கதவை திறக்க முயல அது திறக்காமல் மக்கர் செய்ய காரை ஓங்கி குத்திக்கொண்டு திரும்ப……… அந்த நேரம் பார்த்து, அவனை காண வந்த தேன்மொழி பேந்த பேந்த விழிக்க......
அதை பார்த்த அவன், என்ன ..... என்று கோபமாக கேட்க
நீங்க கூப்பிட்டீங்கனு ..... சிஸ்டர் என்று உள்ளே கையை காட்ட
சாரி அது நீயில்ல கெளம்பு ....
ஹலோ கூப்பிட்டது. நீங்க கொஞ்சம் மரியாதையா பேசுங்க மிஸ்டர் என்று அவள் கை நீட்டி எச்சரிக்கை செய்ய....
ஏய்..... என்ற கோபத்துடன் அவள் நீட்டிய கையை முறுக்க.....
ஆஆ ........ என்ற வலியுடன் அவள் முகத்தை சுருக்க.....
அதனை பார்த்து என்ன நினைத்தானோ....
ச்ச ...... என்று கையை உதறிவிட்டு வண்டி எடுத்து சென்று விட்டான்.
இவள் அமைதியாக அவன் போவதையே பார்த்து கொண்டிருந்தாள். அவளுக்கே ஆச்சர்யமாக இருந்தது இது போன்று வேறுயாரும் செய்திருந்தால் அங்கு நடப்பதே வேறாகி இருக்கும். ஏனோ அவளுக்கு அவனை எங்கோ பார்த்தது போன்ற ஒரு உணர்வு. அவன் கண்ணில் ஏதோ அவளுக்கு தெரிய ...... அதை யோசித்து கொண்டே பள்ளி உள்ளே சென்றுவிட்டாள்.
அவன் நேராக போய் சென்ற இடம் கடற்கறை. அங்கு சென்றவனுக்கு ஒன்னுமே புரியவில்லை. இதயமே இரண்டாக பிளப்பது போன்ற வலி. ஆஆ ............ ஆஆ.......... என்று அவன் கத்தி கொண்டே அவன் ஓட………
தன் காதல் தொடங்கி ஒரு நிமிடத்தில் கருகி போய்விட்டதை நினைத்து அவனால் தங்கி கொள்ளவே முடியவில்லை. ஆம், அவனுக்கே பள்ளியில் அவளுக்காக காத்திருந்த அந்த நொடியில் தான் தன்னுள் இருப்பது காதல் என்று உணர்ந்தான். அடுத்த நொடியே அவள் கழுத்தில் தாலியை கண்டால் அவனும் என்னதான் செய்வான்.
கடற்க்கரையிலே மண்டியிட்டு கத்தி கத்தி ஓய்ந்தவன். தன் இரு கையாளும் முகத்தை மூடி