(Reading time: 22 - 44 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

என்ற நம்பிக்கையுடன், தன் கணவனிடம் என்ன செல்வது என்று தெரியாமல் அவரை பார்க்க........

சரி வுடு மங்க நீ ஏ வெசனபட்டு நிக்க.....நாம பார்த்துக்கிடுவோம் சரியா......

தனக்காகதான் தன் கணவர் அவருடைய உயிரான தாயையும் சமாளிப்பேன் என்று கூறுகிறார் என்று தன் கணவன் மீது காதல் பெருகியது. பையன் தூங்குகிறான் என்பதை றுதிப்படுத்திக்கொண்டு அவரது கன்னத்தில் முத்தமிட்டு ஓடி விட ......

ஏ (ய்) புள்ள இருக்க நேரத்துல என்ன பண்ணுறவ என்று வாய் பேசினாலும் தன் மனைவியின் முத்தத்தில் அவர் கிறங்கி தான் போனார்.

கணவன் மனைவிக்குள் இதுப் போன்ற காமம் இல்லாத அன்பு முத்தங்கள் பரிமாற்றப்படும்போது தான் அவர்களின் இல்வாழ்க்கை சிறக்கும்.

பின் கட்டு வழியாக மெதுவாக சென்ற தேன்மொழி. அங்கு என்ன செய்வது யாரிடம் கேட்பது என்று தெரியாமல், அவளது பிஞ்சு மனம் நடுங்கிதான் போனது.

யாரு கண்ணு நீ.....

தன் இரு கண்களை உருட்டிக் கொண்டு பாவமாக சிவகாமியை பார்க்க.....

அவர் வாஞ்சையுடன் ஓ... நீ தான் பெரியய்யா சொன்ன புள்ளயா கண்ணு. அட எதுக்கு பயப்படுறவ. இங்கன வா என்று அழைத்து தனக்காக மங்களம கொடுத்த உணவினை கொண்டு வந்து, அவளை அந்த திட்டில் அமர வைத்து ஊட்ட ....

தேனுவுக்கு இது போன்ற ருசியான உணவு பிறந்ததிலிருந்து இப்பொழுதுதான் கிடைக்கிறது. அதிலும் அவளது பசியும் சேர்ந்துக் கொள்ள அவள் பசியும் உண்ண, சிவகாமி அதனை பரிவுடன் பார்த்துக்கொண்டே ஊட்டிக் கொண்டிருந்தார்.

அங்கு தேன்மொழிக்காக உணவினை எடுத்து வந்த மங்களம் இந்த காட்சியை பார்த்து கண்ணீருடன் நிற்க....

அதனை பார்த்த சிவகாமி என்னம்மா நா பார்த்த கிட மாட்டனா உங்களுக்கு உள்ள எத்தன சோழி கிடக்கு,

ரொம்ப பெரிய மனசு சிவகாமி உனக்கு இப்பதா புள்ள வந்துச்சு உன் புள்ளயாட்டம் பார்த்துகிடுத.....

இருந்த ஒத்த உறவையும் இழந்து பச்ச புள்ள தவிச்சு இருக்கு. இத கண்டு காணாம இருக்க முடியுமாம்மா....

புள்ள பசில வாடி போய் கிடக்குதுனு நினக்குதே சின்னம்மா..... நா ஊட்டி விட ஊட்டிவிட புள்ள கபுக்கு கபுக்குனு சாப்புடுது. எனக்குதா குடும்பமுமில்ல குட்டியுமில்ல இந்த பச்சபுள்ள இனி ஏம்புள்ள நீங்க கவல படாம சோழிய பாருங்க சின்னம்மா....

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.