(Reading time: 22 - 44 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

கொண்டு கத்தினான் ஆனால் அழவில்லை.

தொண்டை வற்றும் அளவு கத்தியவன். அங்கிருந்த கடலையே வெறித்து கொண்டிருந்தான். அவனுக்கு இதை ஜீரணிக்கவே முடியவில்லை. என்ன ஆனாலும் தன் கண்ணிலிருந்து கண்ணீர் மட்டும் வந்து விட கூடாது என்று உறுதியுடன் இருந்தான்.

இரவு 1 மணி அவனுடைய கைபேசி நூறாவது முறையாக அடித்து ஓய்ந்தது.

இறுகி போய் கடலை வெறித்து கொண்டிருந்தவன் அருகில் நிழலாட..... யார் என்று அவன் பார்க்க......

கதிர் ருத்ரதாண்டவ மூர்த்தியாக நின்று கொண்டிருந்தான்.

நீ எப்........ என்று கார்த்திக் சொல்வதற்குள் அவன் சட்டை பிடித்து இழுத்து ஓங்கி ஒரு அரை விட்டான் கதிர்.

எங்க போய் தொலஞ்சட....... சாய்ந்திரத்துல இருந்து உன்ன காணமேனு நாய்மாரி ஒவ்வொரு இடமா அழஞ்சி திரிஞ்சிட்டு இருக்கே .....

இங்க வந்து என்னடா பண்ணிட்டு இருக்க ராஸ்கல்......என்று அவன் மீண்டும் முதுகில் குத்த வர அவன் கையை பிடித்து தடுத்து இன்னிக்கி தேனை பாத்தேன்டா......என்று கூறிவிட்டு அவன் அமைதியடைய..........

அதுவரை ஆவேசமாக சண்டை போட்டுக் கொண்டிருந்த கதிர்......கண்ணில் ஆச்சரியத்துடன் எப்படா எங்க.....

இங்கதாண்டா எங்கெல்லாம் தேடி அலைஞ்சோ ஆனா இங்க சென்னையிலேயே தான் இருக்கா அதுவும் சென் ஜோசப் ஸ்கூல் டீச்சரா வேல பாத்துட்டு இருக்கா......

ஏய் சூப்பர் மச்சான் நீ போய் பார்த்தியா......

ம்ம் ......பாத்தேன்டா....

என்னடா வெறும் பார்த்தேன் மட்டும் சொல்ற பேசினியா நீ யாருன்னு அவுங்க கிட்ட சொன்னியா.......

இல்ல மச்சான் இனிமே அது சொல்லி என்ன ஆகப் போகுது விடு வீட்டுக்கு போலாம்.

டேய் லூசு என்னடா பேசுற பேசினியா இல்லையா.......

உன்னை நான் வீட்டுக்கு கூப்பிட்டேன்.

கதிர் மணலில் அமர்ந்து கொண்டு வர மறுக்க உண்மையை சொல்லு அப்பதான் நான் வருவேன்.

அதை என்கிட்ட திரும்பவும் கேட்காத மச்சான் என்னால சொல்ல முடியல இனி ஒன்னும் இல்ல முடிஞ்சு போச்சு எல்லாம்.

அப்ப நீ யார்னு கூட சொல்லவே இல்லையா உன் லவ்வ கூட சொல்லலையா.......

6 comments

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.