அப்ளை பண்ணிடறேன்”என்றாள் காவ்யா.
“அதையாவது நீயே எழுதிக் கொள்வாயா?...இல்லை அதுக்கும் நான் உதவணுமா?” பரிமளம் கிண்டலாய்க் கேட்க,
“ஒருத்தரும் தேவையில்லை...நானே எழுதிக்குவேன்!...ஒரு லவ் லெட்டர் கூட எழுதத் தெரியாத அளவுக்கு தத்தியா நான்?”
“ம்ம்...பட்டையைக் கிளப்பு” சொல்லி விட்டு பரிமளம் சாப்பிட ஆரம்பிக்க, அப்போதிருந்தே, என்ன எழுதுவது?...எப்படி ஆரம்பிப்பது?...என்பது குறித்த தீவிர சிந்தனையில் மூழ்கினாள் காவ்யா. “அன்பே...ன்னு ஆரம்பிக்கலாமா?...இல்லை...ஆருயிரே!...ன்னு ஆரம்பிக்கலாமா?”
“ஏன்...“நாதா”...இல்லேன்னா... “பிராண நாதா”ன்னு போடேன்” என்று பரிமளம் சொன்ன போதுதான், தான் வாய் விட்டே பேசிவிட்டோம் என்பதை உணர்ந்தாள் காவ்யா.
மதிய உணவிற்குப் பிறகு இருக்கைக்கு வந்தவள், ஒரு காகிதத்தை எடுத்து, அதில் தான் சிந்தித்து வைத்திருந்ததையெல்லாம் கொட்டினாள்.
மெல்ல எட்டிப் பார்த்த பரிமளா, “பார்க்கலாமா?” கேட்டாள்.
“ச்சூ...இது ப்யூர்லி பர்ஸனல்” என்றாள் காவ்யா.
“அடேங்கப்பா” என்றபடி தன் வேலையைப் பார்க்க ஆரம்பித்தாள் பரிமளம்.
அன்று மாலை எல்லோரும் கிளம்பிய பின், ஆபீஸிற்குள் காவ்யா மட்டும் அமர்ந்திருந்தாள். ஏதோ அவசர வேலையில் மூழ்கியிருப்பது போல் அவள் செய்த பாவ்லாவை நம்பி அவளை தொந்தரவு செய்யாமல் அமைதியாயிருந்தான் ப்யூன் முருகன்.
மேனேஜர் அறையில் நீண்ட நேரம் அவருடன் பேசிக் கொண்டிருந்து விட்டு வெளியே வந்தான் ரவீந்தர். அதற்காகவே காத்துக் கொண்டிருந்த காவ்யா, வேக வேகமாய் எழுந்து சென்று, அந்தக் காகிதத்தை அவனிடம் நீட்டினாள்.
அந்த நேரம் பார்த்துத்தானா மேனேஜர் அவரது அறைக்குள்ளிருந்து வெளியே வரணும்?
“என்ன மேடம்?..நீங்க இன்னும் கிளம்பலையா?” என்று கேட்ட மேனேஜர் தேவநாதன், அவள் கொடுத்த காகிதம் ரவீந்தர் கையில் இருப்பதைப் பார்த்து, “வாட் இஸ் தட்?” கேட்டார்.
வெல வெலத்துப் போனாள் காவ்யா. தொண்டை வறண்டு போக சிரமப்பட்டு எச்சில் விழுங்கினாள்.
இன்னும் சில விநாடிகளில் அங்கு ஒரு அவஸ்தையான சூழ்நிலை உருவாகப் போகின்றது என்பதை உணர்ந்து அவள் கால்கள் நடுங்கின. எங்கே தான் மயக்கம் போட்டு விழுந்து விடுவோமோ? என்கிற பயமும் ஏற்பட்டது.
“எங்கே குடுங்க?” என்று மேனேஜர் கையை நீட்ட,
ஆபத் பாந்தவனாய், எங்கிருந்தோ வந்தாள் பரிமளம். “என்ன காவ்யா?...ரவீந்தர் சாருக்கு