தொடர்கதை - நேசம் நல்கும் நயனிலன் நெஞ்சம் - 05 - சாகம்பரி குமார்
"யார் அந்த ஹைந்தவி..? அவள் உனக்கெப்படி பழக்கம்? எத்தனை நாட்களாக அவளை தெரியும்?" மித்ரன் சைத்ரனிடம் விசாரித்தான்.
ஹைந்தவி மயூரியை விட்டு விலக மாட்டேன் என்று உறுதியாக தெரிவித்தபின் அன்று மாலை சைத்ரனின் அலுவலகத்திற்கு சென்ற மித்ரன் இந்த கேள்விகளை கேட்டுக் கொண்டிருந்தான்.
"அவளை ஆறு.மாதங்களாகத்தான் தெரியும்ண்ணா. ஒரு கேஸ் விசயமாக அவளுடைய போலீஸ் ஸ்டேஷனுக்கு சென்றபோது பழக்கம். பிறகு.."
"சில மிஸ்ஸிங் கேஸ்களை கண்டுபிடிக்க உதவி இருக்கிறாய்…"
"அது எப்படி உனக்கு தெரியும்?"
"அவளே சொன்னாள்…" கிட்டதட்ட அப்படித்தானே…
"ஓஹ்… சவுண்ட்ஸ் குட்.."
"பட், மத்ததெல்லாம் பேட்… ஆமாம் அந்த மயூரியை உனக்கு தெரியுமா?"
"தெரியுமே.. ஹைடியோட திக் ஃப்ரெண்ட்.. இரண்டு மூன்று தடவை பார்த்திருக்கிறேன். ரொம்ப அமைதியான ரகம்."
"வேறு ஏதாவது தெரியுமா?"
"என்ன விஷயம்?"
"சம்திங் தப்பா மைன்ட்ல ஓடுது… ஆனால் ஒண்ணு மயூரிகூட பழக்கம் இருக்கறவரை ஹைந்தவி நம்ம வீட்டுக்கு மருமகளா வர முடியாது…"
"மருமகளா… மைல்ஸ் டு கோ அண்ணா!. பக்கத்து தெருவுக்கு நடந்தே போகற மாதிரி இருந்த என்னோட காதல் பாதை இப்ப ஒன்வேயா மாறி பத்து கிலோ மீட்டர் சுத்திட்டு போகற மாதிரி ஆயிடுச்சு"
"அய்யோ பாவம்… அப்பாவிற்கு டவுட் வந்திடுச்சு. அவர் எப்படி எடுத்துக்கறார்னு தெரியலை."
"நீ வேற துண்டு துண்டா ஸ்கெட்ச் போடறீங்க… ஹைடி ப்ரேக் பண்ண காதலை ஃபெவிகால் வச்சு ஒட்டினாதான் அடுத்த கட்ட நடவடிக்கை பற்றி யோசிக்க முடியும்"
"வெல், அந்த மயூரியை கண்காணிப்பில் வைக்கணும்னு தோணுது. நாம அவளோட வீட்டை மார்க் பண்ணியாகணும்"
"வாட்… எதுக்கு மார்க் பண்ணணும்… மயூரி நல்லவங்க… உறுதியா