நீ முடிஞ்சா மதியம் போய் ராகுலை பாரு...”
“சரிங்க... நான் பார்த்துட்டு உங்களுக்கு சொல்றேன்...”, ராகவ் வைக்க காரை கிளப்பினார் நீரஜா...
அவர் மருத்துவமனையை அடைந்து நோயாளிகளை பார்க்க ஆரம்பிக்க அவளின் அலைபேசி அழைத்தது....
“ஹலோ சொல்லுங்க அத்தை... என்ன இப்போ கால் செய்திருக்கீங்க....”
“பதட்டப்படாத... ராகுலுக்கு எப்பவும் வர்ற ஆஸ்மா அட்டாக் வந்திருக்கு... ரொம்ப திணர்றான்... நீ கிளம்பி வா...”
“அச்சோ எப்போ அத்தை... காலைல சாதாரணமாத்தானே இருந்தான்... வெறும் சளி மட்டும்தான் இருந்துது... இதோ இன்னும் ஒரு ரெண்டு பேர் பார்க்கணும்... முடிச்ச உடனே கிளம்பறேன்...”
“என்னம்மா இது உடனே கிளம்பாம... குழந்தை கஷ்டப்படுதுன்னு சொல்லுறேன்...”
“அத்தை இந்த ரெண்டு பேஷண்ட்டும் முதல்ல இருந்தே என்கிட்டதான் பார்க்குறாங்க... அதான் அத்தை.. நீங்க நாம எப்பவும் கொடுப்போமே அந்த மருந்து மட்டும் கொடுங்க... அதிகபட்சம் ஒரு மணிநேரத்துல வீட்டுல இருப்பேன்....”, நீரஜா சொல்ல என்ன வேலையோ என்று நொடித்தபடியே அலைபேசியை வைத்தார் அவரின் மாமியார்...
லக்ஷ்மி சமைத்து முடித்து தன் தந்தையை அழைத்து பரிமாறினாள்....
“ரமேஷண்ணா பேசினாளாப்பா...”
“ஹ்ம்ம் பேசினான்ம்மா... பணத்துக்கு கஷ்டமா இருக்குன்னு சொன்னான்... வாரத்துக்கு ஒருத்தர் ரெண்டு பேர் காரியம் பண்ண வந்தா ஜாஸ்தி... அதனால இந்த மாசம் பணம் அனுப்பறது கஷ்டம்ன்னு சொன்னான்...”
“பாவம்தான்ப்பா அண்ணாவும்... தனியா அங்க கஷ்டப்பட்டுண்டு இருக்கான்... வேலை எதுவும் இல்லைனா பேசாம இங்க வந்துட சொல்லுங்கோளேன்...”
“இல்லைம்மா எல்லா வழியும் அடைச்சு வச்சிருக்காளாம்... மாநிலம் விட்டு மாநிலம் போறதுக்கெல்லாம் அனுமதி இல்லையாம்... ட்ரைனும் இல்லை... வரவும் முடியாதே...”, இருவரும் பேசியபடியே உணவருந்தி முடித்தனர்...
ரங்கன் சாப்பிட்டு சற்று ஓய்வெடுக்க, லக்ஷ்மி பக்கத்து வீட்டு பெண் கேட்டிருந்ததால் அவருக்கு கைமுறுக்கு செய்ய ஆரம்பித்தாள்.. வேலை முடித்து அடுத்த வீட்டில் கொடுத்துவிட்டு வந்த லக்ஷ்மி சமையலறையை சுத்தம் செய்ய ஆரம்பித்தாள்....
“லக்ஷ்மி, அம்மாடி லக்ஷ்மி....”, தன் தந்தை அழைக்க, என்னவோ என்று சமையலறையிலிருந்து ஓடி வந்தாள்....
“அப்பா என்னப்பா ஏன் ஒரு மாதிரி உக்கார்ந்துண்டு இருக்கேள்... என்ன பண்றது....”,