தொடர்கதை - உனக்காகவே உயிர் வாழ்கிறேன்... - 21 - ஜெபமலர்
நான்கு ஜோடி கண்கள் குயிலியையே பார்த்து கொண்டு இருக்க குயிலி தான் இத்தனை நாள் அடைத்து வைக்கப்பட்டிருந்த அறையை நோக்கி முன்னேறினாள்.
குயிலி பின் தொடர்ந்து ஆசிர்வாதம் தாத்தாவும் அறைக்குள் சென்றார்.
வெளியே நின்ற அந்த பெண்ணோ மாமா நீங்க போய் பேசுங்க... போங்க மாமா என்று சொல்ல அவரோ நான் போய் என்ன சொல்வது என்று புலம்ப குயிலியிடம் மூக்கில் பஞ்ச் வாங்கியவனோ அப்பா... நீங்க போய் பேசுங்க.... உங்களால் மட்டும் தான் இதை சமாளிக்க முடியும் என்றான்.
இல்லை ரவி... இப்போ இருக்கிற நிலையில் நாம் அவளிடம் என்ன சொன்னாலும் அது அவளுக்கு புரியாது என்றார்.
அதற்காக அப்படியே விட்டு விட முடியாதே என்றான் அருகில் நின்ற சங்கர்.
ஆமா மாமா... வாங்க போய் பேசி பார்க்கலாம் என்று அந்த பெண் சொல்ல மூவரும் அங்கிருந்து நடந்து குயிலி இருந்த அறையின் அருகில் வந்தனர்.
அம்மாடீ... ஏம்மா இவ்ளோ கோபம் என்று கேட்கும் ஆசிர்வாதம் குரல் கேட்க மூவரும் வெளியே நின்று விட்டனர்.
தாத்தா.... கார்த்திக் ஏன் இப்படி செய்தான்...
என்ன செய்தான்... நீ அவனை பார்த்தியா...
பார்க்கலை தாத்தா... ஆனால் எல்லாம் புரியுது தாத்தா... என்னை எவ்ளோ முட்டாளாக்கியிருக்கான். ஆனால் நான் அது தெரியாமல் ஒவ்வொரு நொடியும் அவனுக்காக நொடியும் யோசித்து இருக்கேன்.
எப்படிம்மா... இவ்ளோ உறுதியா சொல்ற...
தாத்தா... நம்மளை இங்கு அடைத்து வைச்சிருக்காங்களே.. என்னைக்காவது கொடுமை படுத்தி இருக்காங்களே...
இல்லைமா... அவங்க பாஸ் வந்தால் தான் நம்மை என்ன பண்ணுவாங்கனு தெரியும் என்றானே ஒருத்தன்.
அவங்க பாஸ் வந்து எதையும் கிழிக்க போறது இல்லை.. இவனுங்க பாஸ் கார்த்திக் தான்..
எப்படிம்மா இவ்வளவு உறுதியா சொல்ற...
என் மருமகள் ரொம்ப புத்திசாலி... அவளால கண்டுபிடிக்க முடியாதது ஏதாவது இருக்கா என்று கேட்டுக்கொண்டே உள்ளே வந்தார் அவர்.
அவரை பார்த்து ஆசிர்வாதம் தாத்தா யார் இவர் என்று முழிக்க அவரோ குயிலி அருகில் சென்று குயிலிமா என்று அவள் தலையை வருட அதுவரை அடக்கி வைத்திருந்த கோபம்