(Reading time: 6 - 12 minutes)
Unakkaagave uyir vazhgiren
Unakkaagave uyir vazhgiren

எல்லாம் இருந்த இடம் தெரியாமல் மறைய மாமா என்று அவரை கட்டிக் கொண்டாள் குயிலி...

பெர்முடா முக்கோணம்.....

சுக்கு நூறாய் உடைந்து சிதறிய படகின் மரத்துண்டை பிடித்த பிரதாபன் பிரசாத் சார்... பிரசாத் சார் என்று சுற்றி தேட அப்பா சார் கொஞ்சம் மயக்கமாகிட்டார்ப்பா என்றவாறே அவரையும் இழுத்து கொண்டு அருகில் வந்தான் ராகவ்...

ராகவ்... உனக்கு ஒன்னும் இல்லையே

எனக்கு ஒன்றும் இல்லை என்று ராகவ் சொல்லும் போதே சுற்றி பார்க்கலாம் என்று படகில் ஏறினால் எதோ சுழலில் மாட்டிக் கொண்டோம் போலேயே என்றார் பிரசாத்...

பிரசாத் சார்... ஆர் யூ ஓகே என்று கேட்ட பிரதாபன் மரத்துண்டின் உதவியுடன் அவரை நெருங்க யாயாயா.. ஐயம் ஆல் ரைட் என்றவர் மெதுவாக இவனுக்கு எப்படி மயக்கம் தெளிந்தது என்றார்.

அப்பா... நல்ல வேளை லைவ் ஜாக்கெட் போட்டு இருந்ததால் தப்பித்தோம். இல்லை என்றால் அவ்ளோ தான் என்றவன் அப்பா தூரத்தில் ஒரு தீவு தெரிகிறது. நாம் அங்கு சென்றால் ஒருவேளை உதவி கிடைக்கலாம் என்றவன் இங்கேயே நில்லுங்கள்... நான் இப்போது வருகிறேன் என்றவன் எதையோ தேடிக் கொண்டு நகர்ந்து சென்றான்.

பிரதாபன்... இவனுக்கு உண்மை தெரியுமா இல்லை தெரியாதா என்றான் பாவமான குரலில்...

அதுதான் எனக்கும் தெரியல என்று பிரதாபனும் அடிக்குரலில் கூறினார்.

எது எப்படியோ... பாராசூட் கன் வைத்திருந்த பேக் எங்கிட்ட பத்திரமா இருக்கு என்றான் பிரதாபன்.

எது இருந்து என்ன செய்ய... இங்கிருந்து தீவுக்கு போய் சேருவோமா என்றே தெரியவில்லையே என்றார் பிரசாத்.

அந்த இடத்தை சுற்றி பார்த்தார் பிரதாபன். ஒரு பக்கம் அவர்கள் கடந்து வந்த எல்லை பகுதி இவர்களை தாண்டி பத்து அடி தொலைவில் சீறிக்கொண்டு இருந்தது. ஏதோ நாகினியின் வாயில் இருந்து புறப்படும் தீ போல எல்லை ஓரம் சீறிக்கொண்டு அலைகளை எழுப்பி கொண்டு இருந்தது. ஆனால் இவர்கள் நின்ற பகுதி அமைதியாக குளம் போன்ற உணர்வை கொடுத்தது.

அதே அடுத்த பக்கம் பத்து அடி தொலைவில் ஆறு போல தண்ணீர் ஓடிக்கொண்டிருந்தது. அதன் நடு நடுவே சிறிது இடைவெளி விட்டு சுழல் போல தண்ணீர் சுழண்டு இழுத்து கொண்டு இருந்தது. அதை கடப்பது முடியாது என்பது தான் நிச்சயம் என்று இருவருக்கும் புரிய இருவரும் ஒருவரையொருவர் பார்த்து கொண்டனர்.

14 comments

  • Eppov!! Unga karpanai level vera ji :hatsoff: Nagini mathiri pugai, oru water land marupakam panikatti ya :eek: :eek: innum yena ellam.sagasam pana poraru?? But master Raghav has planned for a master plan 👍 so ramu than ivangalai captivate seithu irukangalo?? Correct spot la pause panitingale ji facepalm fantastic flow!! 👏👏👏👏👏<br /><br />Waiting for next update.<br />Thank you.
  • Dear Jeba! இந்த புத்தாண்டை சில்சீ தங்கள் கதை, கவிதைகளை அள்ளித் தெளித்து 'ஜெபா ஆண்டு' என அறிவித்துள்ளனர்! தங்களுக்கு இந்த கௌரவம் உரியதுதான்! பாராட்டு!
  • குடல் மார்னிங்!! அன்பு ஜெயாவுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்! இந்த ஆண்டில் நிறைய எழுதுங்கள்! புத்தகங்கள் வெளியிடுங்கள்! திரையுலகிலும் புகுந்து வெற்றி பெறுங்கள்!

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.