எல்லாத்திற்கும் மேலாக அவள் பக்கத்தில் இருந்த தனது மகனின் முகத்தில் தெரிந்த மகிழ்ச்சி. முதல் முறையாக ஆதி வெட்க படுகிறான்..... அதை பார்க்கையில் தாய் உள்ளம் பூரித்தது.
அப்போழுதேயே இருவர்க்கும் திருமணம் செய்து வைத்து விட வேண்டும் என்று என்னும் அளவிற்கு ஆசை எழுந்தது .
இந்த சந்தோஷத்தில் அகிலாவை பார்வதி கவனிக்க தவறி விட்டார்..... அவள் தான் இந்த வீட்டு மருமகள் என்று சூசகமாக கூறி பூவையும் குங்குமத்தையும் அவளிடம் நீட்டினாள்.
அப்பொழுது அதை எடுக்க மறுத்தவள் விறு விறுவென்று வாசல் நோக்கி சென்று விட்டாள்.
வாசல் வரை சென்றவள், பின்னர்.... திரும்பி பார்வதியை பார்த்து ''ஒருவேளை, இந்த வீட்டுக்கு நான் மறுபடியும் வந்த அப்ப இந்த குங்குமத்தையும் பூவையும் எனக்கு தருவீங்களா?????'' என்று ஏக்கத்துடன் கேட்டாள்.
அவளது கண்களில் என்ன? கண்ணீரா???? ஏன் எதற்காக???? என்று பார்வதி யோசிக்கும் முன் ஆதியுடன் கார்க்கு சென்று விட்டாள்.
ஆதியின் முன் அவராலும் எதும் கேட்க முடிய வில்லை. அகிலாவும் எதும் பேச வில்லை.... அதேயே அடிபட்ட பார்வையுடன் அகிலா அவர்களது வீட்டை விட்டு சென்றாள்.
அதற்கு பின்.... அவர்களது வீட்டில் நடந்த அனைத்தும் சோக நிகழ்வுகளேயே.... வீட்டின் மகிழ்ச்சி சுத்தமாக தொலைந்து போனது.
அகிலா சென்ற பிறகு, அந்த வீட்டின் மகாலக்ஷ்மியே சென்று விட்டது போல பார்வதி அம்மாள் உணர்ந்தார்.
அகிலா தான் குங்குமத்தையும் பூவையும் மறுத்தாள்..... ஆனால், இன்று வரை பார்வதி அம்மாளின் தாலி தான் ஊசலாடி கொண்டு இருக்கிறது.
அகிலா இந்த வீட்டிற்கு திரும்பி வருவாளா???? அப்படி வந்தால், ஆதி அவளை ஏற்று கொள்வானா???? அகிலா மட்டும் ஆதியின் மனைவி ஆகிவிட்டால் அத்தை கூறியபடி குல தெய்வ பூஜையை அவள் செய்வாள்.... அத்துடன் தனது கணவரின் உடல் நிலையும் சரியாகி விடும். என்று நம்பினார்.
ஆனால், இவை எல்லாம் நடக்க வேண்டும் என்றால் முதலில் அகிலா இங்கு வர வேண்டும்.... அது நடக்குமா???? மீண்டும் கடவுள் என்னை அவளை சந்திக்க வைப்பாரா???? ஆதி அவளை கண்டால் என்ன செய்வானோ??? என்று மனதில் எழும் பல கேள்விகளுக்கு ஆண்டவனிடம் விடை கேட்க வைத்தீஸ்வரன் கோயில் நோக்கி ஆதியுடன் புறப்பட்டார்.
பார்வதி அம்மாளின் கேள்விக்கு ஆண்டவன் பதில் கூறுவாரா???? அகிலாவை அவர் கண் முன் காட்டுவாரா???? என்று அடுத்த அத்தியத்தில் காண்போம்.
தொடரும்