அளவிற்கு வாய்விட்டு சிரித்தான்.
ஆதியின் நிலை கண்டு பார்வதியே ஒரு நிமிடம் பயந்து விட்டார்.
அம்மா..... அவள் வரவேண்டும்....... அகிலா கண்டிப்பாக இந்த வீட்டிற்கு வரவேண்டும். என்று கர்ஜித்தான்.
அவளால் என் பதவி போனது, நம் வீட்டின் நிம்மதி போனது...... உண்மையாக அவளை நான் நேசித்ததற்கு எனக்கு சரியான செருப்படி கொடுத்து விட்டாள்.
சரியான நாடகக்காரி....... நீங்கள் மட்டும் என் அம்மாவாக இல்லையென்றால் நான் பெண் குலத்தையே வெறுத்து இருப்பேன்.... என்னிடம் நடித்து என்னை மொத்தமாக ஏமாற்றி விட்டாள்.
அப்பாவிற்கும் அவளால்தான் இந்த நிலை.
அவளை நான் திரும்ப சந்திக்க வேண்டும்....அவளை என் மனைவி ஆக்கி இந்த வீட்டிற்கு அழைத்து வரவேண்டும்.
அவளை அணு அணுவாக சித்திரவதை செய்ய வேண்டும். இந்த ஐந்து வருடமாக நான் பட்ட வேதனையும் அவமானத்தையும் அவளும் அனுபவிக்க வேண்டும். என கூறி கொண்டேயே போனவனின் தோளை உலுக்கினார் பார்வதி.
பின்னர் தான்... ஆதி நிதானத்திற்கு வந்தான்.
தனது அன்னையின் பயந்த முகத்தை கண்டு திடுக்கிட்டான். கஷ்டப்பட்டு தன்னை இயல்பு நிலைக்கு மாற்றியவன்....
சீக்கிரம் கிளம்பி வாங்கம்மா....நான் கார்யா ரெடி பண்றேன்.... என்று கூறியவன் தனது தாயின் பதிலுக்கு காத்திராமல் அறையாய் விட்டு வெளியேறினான்.
எப்பொழுதும் பெண்களை மதிக்க வேண்டும் என்று நினைப்பவன் ஆதி. அவன்யா இப்படி மாறிவிட்டான்.
ஆதிக்கு அகிலாவால் ஏற்பட்ட வலிகள் அதிகமேயே..... ஆனால், இன்று வரை ஏனோ அகிலாவை தவறானவளாக பார்வதியால் ஏற்று கொள்ள முடியவில்லை.
''ஒருவேளை, இந்த வீட்டுக்கு நான் மறுபடியும் வந்த அப்ப இந்த குங்குமத்தையும் பூவையும் எனக்கு தருவீங்களா?????'' என்று ஏக்கத்துடன் கேட்ட அகிலாவை பார்வதியாள் இன்று வரை மறக்க முடியவில்லை.
ஒரு நாள்..... ஒரேயே நாள் தான் அகிலா வீட்டிற்கு வந்தாள். ஏனோ அப்பொழுதேயே, அவள் தான் இந்த வீட்டின் மருமகள் என்று பார்வதி முடிவு செய்து விட்டார்.
அவளது தைரியம், பேச்சு, பணிவு..... செதுக்கி வைத்த சிற்பம் போல இருந்த அவளது அழகு ..... எல்லாம் சேர்த்து பார்வதியை வெகுவாக கவர்ந்தது.