அவர் இரண்டாவது மகனும் மருமகளும் இரண்டு சக்கர வாகனத்தில் இறங்க,
எங்கன அன்பரசு போய்ட்டு வரிங்க.....
சினிமாக்கு தான்ப்பா......
ஏன்டா உங்கம்மா அங்கன தனியா வேலை பாத்து கஷ்டபடுதே கொஞ்சம் ஒத்தாச பண்ணிட்டு போயிருக்கலாமுல ராசா.
தெனமும் ஒத்தாச பண்ணிட்டு தானா இருக்கோம்பா.... ஒருநா (ள்) என் பொண்டாட்டி கூட வெளிய போய்ட்டு வரேன் அது பொருக்கலையா உங்களுக்கு.....
இது மகன் பேசும் பேச்சல்ல ..... மருமகள் ஏத்திவிட்டு தான் பேசுகிறான் என்பதை புரிந்துக்கொண்டார் அந்த அனுபவமிக்கவர்.
இருந்தும்.....
சரிய்யா எதுனா சாப்புட்டிங்களா???
ம்ம் நாங்க ஹோட்டல் சாப்புட்டோம் பா.
சரிய்யா அசதியா இருக்கும் போய் ஓய்வெடுங்க.... என்று அவர் சொல்லிக்கொண்டே டீ கடை நோக்கி சென்றார்.
டீ கடை வந்தவுடன் , சம்முகம் அக்கௌண்ட்-ல ஒரு டீ - ய போடுயா......
ஏன்யா ஏற்கனவே எறநூறு- ரூபாவ எப்ப தருவ அளாளுக்கு வடை வேணும், பன்னு வேணுமுனு உன் புள்ள பேர புள்ளைய வாங்கிட்டு போவுது. நீ என்னமுனா கடனை அடைக்காம இன்னு கடன வாங்குறவ .
அட இந்த ஊருகாரவுக தானயா நாங்க எங்க போய்டப்பூரோ கடன அடைக்காம ஊருல உன்ன விட்டா வேற டீ கடை இல்லயினா அலட்டிக்கிட்டு திரியுற .
நீ என்ன வேணா சொல்லு அருணாச்சலம் உங்கடன அடச்சிப்புட்டு தா உனக்கு டீ தருவே அம்புடுதா....
டீ கடைகாரன் அசிங்கபடுத்திட்டானே என்று கோவத்துடன் துண்டை உதறி தோளில் போட......... அந்த வழியாக வந்தான் அவருடைய மூத்தமகன் ரகுராமன்.
நைநா ........
அவர் திரும்பி தன் மகனை பார்த்து என்னடா பொண்டாட்டிய ஆசுபத்திரில தனியா விட்டு புட்டு இங்க என்ன பண்றவே(ன்).
நைநா சிங்கக்குட்டி பொறந்துருச்சு ..... விஷயத்த சொல்லி புட்டு போக வந்தே(ன்) நைநா.
அப்புடியா டா மகனே எனக்கு தெரியுடா....... இந்த தடவ சிங்ககுட்டி தான் பொறக்கு உங்க அம்மாகிட்ட சொல்லிகிட்டே இருந்தேடே......