தண்டனை குடுத்தாலும் நாங்க ஏத்துக்குறோம். ஆனா நீங்க எந்த தண்டனை குடுத்தாலும் நான் தான் கதிரோட பொண்டாட்டி அத யாரும் மாத்த முடியாது. என் பேர் பிரியதர்ஷினி. எனக்கு உறவுனு சொல்லிக்க யாருமில்ல..
என்னாது அனாத புள்ளயா.....
அம்மா......... கமலா......... என்று தந்தை மகன் இருவரும் ஒரு சேர குரலை உயர்த்த...... கமலா அமைதியானார்.
எஸ் நான் அனாதை தான். கதிர் அவள் கையை பிடித்து இருக்க, அவனை நோக்கி ஒரு புன்னகை சிந்திவிட்டு, பேங்க்ல வேலை, நானும் கதிரும் பஸ் ஸ்டாண்ட் - ல தான் மீட் பண்ணீருக்கோம். இரண்டு வருஷம் முன்னாடி கதிர் என்கிட்டவந் ..........
கதிர் அவள் கையை பிடித்து,
இரண்டு வருஷமா நானும் பிரியாவும் லவ் பண்றோம். நானும் உங்ககிட்ட என்னோட காதல் சொல்ல நினைக்கிறப்ப வீட்டோட கஷ்டத்த பத்தி மட்டும் தான் சொல்றிங்க நான் சொல்றத கேக்குறது கூட இல்ல. ஒரு மாசம் முன்னாடி தான் பிரியா அம்மா தவறிட்டாங்க. நீங்க எனக்கு சொந்தத்துலதா முடிப்பேன் வேற பேசிட்டு இருந்திங்க. அதான் யார்டயும் சொல்லாம கல்யாணம் பண்ணிகிட்டே. என்ன மன்னிச்சிருக்க நான் பண்ணது தப்புதான் ஆனா எனக்கு வேற வழி தெரில.
அப்பொழுதுதான் தமிழ் வீட்டையடைய, அனைவரும் மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டு இருக்க, இவன் அமைதியாக நின்று விட்டான்.
அதா உங்க இஷ்டபடியே எல்லாத்தையும் பண்ணிகிட்டிங்கல்ல. பொறவு எங்ககிட்ட எதுக்கு சொல்லிகிட்டு,
அப்பா.......
அவர்களுக்கு சாப்பாட போடு கமலா.... மணி பத்தாச்சு. எல்லாரும் சாப்புட்டு போய் படுங்க என்று திண்ணையில் அமர்ந்துக்கொண்டார்.
கமலாவுக்கு அவளின் வேலை மட்டுமே பிடித்த விஷயமாக இருந்தது. மற்றது மனதுக்கு ஒப்பவில்லை. மூஞ்சை தூக்கி வைத்துக் கொண்டே அவர் பரிமாற போக......
அவள் விருட்டென்று எழுந்து, கதிர் நம்ம எங்க தூங்கணும்..........
அவன் அந்த ஒரு அறையை காட்ட உள்ளே சென்று கதவை சாத்திக்கொண்டாள்.
அவள் அப்படி செய்தது அங்குள்ள அனைவருக்கும் என்னவோ போல் ஆகிவிட்டது. கதிரேசனுக்கு அவள் கோவமாக சென்றுவிட்டாள் என்று நினைத்து சாப்பிட பிடிக்காமல் இரண்டு வாய் மட்டும் எடுத்து வைத்துவிட்டு சென்றுவிட்டான்.
கமலாவிற்கு தான் மனசு கொளுந்துவிட்டு எரிந்தது.