என்ன ஒரு கொழுப்பு சாப்பாடு போடுறப்ப ... விருட்டுனு எந்திரிக்கிறது என்ன பழக்கமோ கருமமோ...... சை..... பிள்ளைய பாரு புள்ளைய ..... ஓடி வந்து தாலி கட்டிக்கிட்டவுளுக்கே இந்த எகத்தாளமா........ இதுல நல்லா வாக்கப்பட்டு வந்துருந்தா அம்புடுதா போலருக்கே........இந்த பய வேற மந்திரிச்சு விட்ட கோழியாட்டம் அவ பின்னாடி திரியுறான் என்ன மயக்கமருந்து போட்டாளோ என் புள்ளைக்கு......... சமையலறையில் சன்னமாகதான் புலம்புக்கொண்டிருந்தார். ஏனென்றால் பிரியாவின் நடவடிக்கை அவருக்கு ஒரு வித கலக்கத்தை குடுத்திருந்தது.
கதிர் சாப்பிட்டு விட்டு அறைக்குள் வர, அவளது பொருட்களை எடுத்து அலமாரியில் அடுக்கிக் கொண்டிருந்தாள் அமைதியாக, இவனுக்கு அவள் எந்த மனநிலையில் இருக்கிறாள் என்று தெரியாமல் பேச சிறிது பயமாக இருந்தது. அதனால் அமைதியாக அவள் அருகே சென்று,
நா வேணுணா கொஞ்சம் ஹெல்ப் பண்ணடுங்களா......
இல்லைங்க இதோ முடிஞ்சிருச்சு.
சாரிங்க.... எங்க வீட்ல யாரவது பேசுனது உங்க மனச காயப்படுத்திருந்தா அவுங்களுக்கு பதிலா நான் மன்னிப்பு கேட்டுக்குறேன். அதுக்காக சாப்புடாமயா வரது. உடம்புக்கு எதுனா ஆயிடப்போகுதுங்க. நா வேணுனா கடைல போய் எதுனா வாங்கிட்டு வரட்டுங்களா.....
அவள் அவனை பார்த்து சிரித்துக்கொண்டே, உங்க வீட்ல பேசுனது நியாயம் தான பெத்த புள்ள இப்புடி கல்யாணம் பண்ணிட்டு வந்தா யாருக்கு தான் வலி இருக்காது கதிர். நான் சாப்புடாம வந்ததுக்கு காரணம் என் புருஷன் வீட்ல ஃபர்ஸ்ட் சாப்புடப்போறப்ப வேண்டா வெறுப்பா சாப்பாடு போடுறப்ப மனசு கஷ்டமா ஆயிடுச்சு. அதான் சாப்புட புடிக்கல வந்துட்டே.எனக்கு யார் மேலயும் கோவம் இல்ல கதிர் நீங்க நிம்மதியா தூங்குங்க.....
பசிக்கலயாங்க நான் கடையில வாங்கிட்டு வந்து தரேன்.
என் பேக்-ல பிஸ்கட் பாக்கெட் இருக்கு நா பசிச்சா சாப்டுகுறேன்ங்க......
அவன் வேதனையோடு அவளை பார்க்க......
ரொம்ப ஃபீல் பண்ணாம தூங்குங்க கதிர் என்று அவன் முகம் பார்க்காமலே..... துணி மடித்துக்கொண்டு கூற,
அவன் தலையணை பெட்ஷீட் எடுத்து கீழே விரிக்க போக.....
கதிர்..... என்ன பண்றிங்க .....
படுக்க....
மேலயே படுங்க..... எனக்கு ஒன்னும் ஃபிராப்ளம் இல்ல.....
அவன் மேலயே ஒரு ஓரமாக படுக்க......அவள் சிரித்துக்கொண்டே லைட்டை ஆஃப் செய்து