தொடர்கதை - கனவே கலையாதே.... - 01 - தனுசஜ்ஜீ
"நிமிர்ந்த நன்னடை
நேர்கொண்ட பார்வையும்,
நிலத்தில் யார்க்கும் அஞ்சாத
நெறிகளும்,
திமிர்ந்த ஞானச் செருக்கும் இருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ
தில்லையாம்;
அமிழ்ந்து பேரிரு ளாமறி
யாமையில்
அவல மெய்திக் கலையின் றி
வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல்
பெண்ணற மாகுமாம்
உதய கன்ன உரைப்பது
கேட்டிரோ!
- பாரதியார்
பாரதியின் உணர்ச்சிமிக்க வரிகள் இதை ஒவ்வொரு முறை உச்சரிக்கும் போதும் பெண்ணாய் பிறந்த அனைவருக்கும் உணர்ச்சி பொங்க தான் செய்கிறது. ஆனால் அனைத்து பெண்களும் புதுமை பெண்கள் ஆகி விட்டனர் என்பதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன். பெண்களின் நிலை ஒவ்வொரு இடத்திற்கும் தகுந்தது போன்று மாறி கொண்டுதான் இருக்கிறது.
இந்த கதையில் வரும் பிரியதர்ஷினி எந்த மாதிரி பெண் என்று கதையை படித்துவிட்டு தங்கள் விமர்சனங்களை கூறுங்கள்.
வாங்க கதைக்கு போவோமா!!!!
'கமலா என்ன பண்ணிட்டு இருக்க ஒரு காப்பி தண்ணி கேட்டு எம்புட்டு நேரமாவுது' என்று அருணாச்சலம் குரல் கொடுக்க.....
ஆமா இந்த வீட்ல நாமட்டும் தான் இருக்கனாக்கோ வீட்டுக்கு ரெண்டு மருமவள கூட்டி வந்து என்ன பிரயோசனம் நான் தா வேலை செஞ்சி சாகனும் விதியிருந்தா என்னத்த பண்ண.
இப்ப நான் என்ன கேட்டுட்டே முன்னு இந்த கத்து கத்துற. நீ ஒன்னு குடுக்க வேணா உன் சோழிய பாரு என்று துண்டை உதறி தோளில் போட்டு கொண்டு வெளியே செல்ல, அங்கு