(கமலம்மா, அருணாச்சலத்தின் மூன்றாவது பிள்ளை தான் கதிரேசன். சி என் சி கம்பெனி ஒன்றில் சூப்பர்வைசராக வேலை பார்க்கிறான் மாதம் பதினைந்தாயிரம் சம்பளம். இவன் ஒருவன் சம்பளத்தில் தான் இந்த குடும்பமே ஓடுகிறது.)
பிரியதர்ஷினி முகத்தில் பயமில்லை. கூச்சலிடும் கமலாம்மாவை கூர்மையாக நோக்கி கொண்டிருந்தாள். அவள் பார்வையில் உள்ள ஏதோ ஒன்று கமலாம்மா வாயை கட்டி போட்டது.ஊர் முழுவதும் அங்குதான் கூடி வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தது.
அருகில் இருந்த கதிரை அவள் பார்க்க அவன் பாவமாக அவளை பார்த்தான். அவள் கண்ணசைத்து சிறு சிரிப்புடன் அவன் தந்தையின் புறம் நோக்கி, இவர் உங்க புள்ள தான???????
கமலா" இல்ல இனிமே இவன் என் புள்ளையே இல்ல".
பிரியதர்ஷினி, "அப்புடியா சரி ஓகே வாங்க கதிர் நாம போகலாம்" என்று அவள் அவன் கை பிடித்து திரும்பி நடக்க பார்க்க....
இதனை பார்த்த கமலாம்மா வயிற்றில் புளி கரைத்தது. பின்ன எல்லாரோட வண்டியும் இந்த ஒத்த சம்பளத்துல தான ஒடுது.
அருணாச்சலம், " அவன் என் பையன் தான் மா".
ம்ம்..... அப்ப உங்க பையன எதுக்கு ஊர் முன்னாடி வச்சி அசிங்கபடுத்திறிங்க. உங்க வீட்டு பிரச்சனை ஊர்தான் பேசிமுடிவெடுக்கனுமா??? என்று அவள் சற்று கோபத்துடன் கேட்டாளோ!!!!!!
அவர் அப்பொழுது தான் ஊரே கூடி நிற்கிறது என்பதை உணர்ந்தார்.
அருணாச்சலம் அமைதியாக தன் வீட்டு மக்களை உள்ளே போகும்படி கூறினார்.
அவரைத் தொடர்ந்து அனைவரும் உள்ளே செல்ல கதிரேசன், பிரியதர்ஷனி கடைசியாக சென்றனர்.
ஒரே ஒரு அறை, சமையலறை, ஒரு ஹால் இது தான் கதிரின் வீடு.
ஊரில் சுற்றி திரியும் இளவட்டங்கள் இரண்டு மூன்று பேர் ஆற்றை கடக்கையில் குட்டி சுவரில் அமர்ந்திருந்த தமிழிடம்,
ஏலேய் தமிழு இங்கன என்ன பண்ணிட்டிருக்கவ அங்க உன் அண்ணங்காரன் யாரையோ இழுத்துட்டு வந்துருச்சா. ஊரே உன் வூட்டு முன்னாடி தான் இருக்கு டேய்........
விஷயத்தை கேள்விபட்ட தமிழ் ஒரே ஒட்டமாக வீட்டை நோக்கி ஓட......
வீட்டில் நுழைந்த அனைவரும் ஆளுக்கொரு மூலையில் இருக்க,
பொறுத்து பொறுத்து பார்த்த பிரியா அவளே பேச்சை தொடங்கினால்,
எல்லாரும் என்ன மன்னிச்சிருங்க...... நாங்க பண்ணது தப்புதான்.அதுக்காக நீங்க என்ன