அவன் அருகில் மறு ஓரம் படுத்துக்கொண்டாள்.
அவன் தூக்கம் வராமல் பிரண்டு பிரண்டு படுக்க....
இவளும் அவன் புறம் திரும்பி தூக்கம் வரலயா..... கதிர்.
ம்ம் என்று தலையாட்ட......
அவன் கையை பிடித்துக் கொண்டு, எல்லாமே சீக்கிரம் சரியாய்டு நான் இருக்கேன் உங்கக்கூட நிம்மதியா தூங்குங்க......
அவன் இதழில் ஒரு நிம்மதி புன்னகை வர, கண்ணை மூடினான். சிறிது நேரத்தில் அவனிடம் இருந்து சீரான மூச்சு வர..... அவன் தூங்கிவிட்டான் என்பதை உறுதிசெய்து, அவள் எழுந்து அமர்ந்தாள்.
அவன் முகத்தைப் பார்க்க குழந்தை தூங்குவதை போல் அவளுக்கு தோண, அவள் சிறு புன்னகையுடன், யாரிவன்.... எனக்காக எவ்வளவு செய்கிறான். இவனுக்கு நான் என்ன செய்தேன். கடவுள் தான் என்னை இவனிடம் சேர்த்து வைத்திருக்கிறது. இனி என்னால் இவன் வாழ்க்கை சிறக்க மட்டுமே வேண்டும் என்ற உறுதி எடுத்துக்கொண்டு அவள் அமர்ந்த நிலையில் உறங்க......
கதிருக்கும் பிரியதர்ஷினிக்கும் என்ன சம்மந்தம் எப்படி இணைந்தார்கள்????
அவுங்க இரண்டு பேரும் தூங்கட்டும் அவங்கள பத்தி ஒரு சின்ன ஃபிளாஷ்பேக் நாம பார்த்துட்டு வந்துருவோம்.
இரண்டு வருடம் முன்பு,
அரசு பேருந்து மிதமான வேகத்தில் சென்றுகொண்டிருந்தது. பேருந்தின் உள்ளே பேரிரைச்சல் பள்ளி விட்டு வீடு திரும்பும் இளசுகள் கதைகளை அலந்துக்கொண்டிருக்க, கல்லூரி மாணவர்கள் படியில் தொங்கிக்கொண்டு ஆர்ப்பாட்டம் பண்ணிக் கொண்டிருந்தனர். வீதி வியாபாரிகள் விற்காத மீதி பொருட்களை மூட்டை கட்டி நெருக்கடியில் நுழைய, நிறுவனங்களில் வேலை முடிந்து வீடு திரும்பும் தொழிலாளர்கள் என அந்த பேருந்து இண்டு இடுக்கு விடாமல் ஆட்கள் முழுவதையும் சுமந்துக் கொண்டு சென்றுக்கொண்டிருந்தது.
அதில் கதிரேசனும் இருந்தான். நல்லவேளை இந்த கூட்டத்தில் அவனுக்கு ஜன்னலோர இருக்கை கிடைத்தது. அன்று அவன் மனம் உற்சாகமாக இருந்தது
ஏனென்றால் தினமும் பார்க்கும் அவளை இன்றும் காணப் போகிறோம் என்ற ஆவல். ஆம் கடந்த ஒரு வாரமாக அவன் அவளை பார்க்கிறான். முதலில் பார்க்கும்போதே ஏதோ ஜென்ம ஜென்மமாக பார்த்த உணர்வு. ஆனால் அவன் பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை.
ஏனோ நேற்று பார்த்ததிலிருந்தே அவன் மனது துள்ளி குதித்துக் கொண்டு தான் இருக்கிறது. ஏனென்று தெரியாத ஒரு தவிப்பு. இன்பமான அவஸ்தையாக இருந்தது.