எப்பொழுதடா அடுத்த முறை பார்ப்போம் என்று ஏங்கிக் கொண்டிருந்தான். அதான் இன்னும் சில நிமிடங்களில் அவளை சந்திக்கப் போகிறோம் என்ற பேராவல் அவனை ஆட்க்கொண்டது.
அவளது நிறுத்தத்தில் வண்டியும் நின்றது. இதோ என் தேவதை. அடர் பச்சைநிற காட்டன் புடவை ஓரத்தில் சின்ன பார்டர், எந்த புடவையும் பாந்தமாக பொருந்தும் உடல்வாகு. அடர்த்தியான நீளமுடி பின்னலிட்டிருந்தாள். முகத்தில் கருப்பு நிறத்தில் ஒரு குட்டி பொட்டு அதன் மேலே சந்தனம். காதோடு குட்டி ஜிமிக்கி. மெல்லிய செயின் கழுத்தில், வலது கையில் கருப்பு நிற வாட்ச். இடது கையில் மெலிதான தங்க பிரேஸ்லெட். வட்டமான முகம், சந்தன நிறத்தில் சிலைபோல் இருந்தாள். ஆனால் பார்வையில் சிறு கண்டிப்பு.
எப்பொழுதும் போல அவன் அவளை விழுங்கும் பார்வை பார்த்துக் கொண்டிருந்தான். வண்டி அவளது நிறுத்தத்தில் இருந்து கிளம்ப, மனது அவனுக்கு அடித்துக்கொண்டது. இந்த நிமிடம் நீளாதா என்ற எதிர்பார்ப்புடன் அவன் பார்த்துக்கொண்டிருக்க, வண்டி கிளம்ப அவளும் அவனை பார்த்தாள்.
பார்வையில் எந்த சலனமுமில்லை. அவள் தன்னை தான் பார்க்கிறாள் என்பதை அவன் உணரும் முன்பே வண்டி கிளம்பிவிட்டது. அவள் அவனை பார்க்க...... அவளது முதல் பார்வையில் அவன் உறைந்து தான் போனான்.
அச்சோ...... அவ என்ன பார்த்தாளா!!!! கடவுளே என்னால நம்ம முடிலயே....... என் அழகி என்ன பார்த்துட்டா...... அப்பனா நான் அவளை டெய்லி பார்க்குறது அவளுக்கு தெரிஞ்சிருக்கு........ அவன் மனம் உற்சாக கடலில் மூழ்கி மூழ்கி முத்தெடுத்துக் கொண்டிருந்தது.
அவளின் ஒரு பார்வைக்கு இவன் இப்படி ஆகிவிட்டான்.
இப்படியே ஒரு வாரம் இருவரும் பார்வையிலே சென்றது. ஆனால் ஒரு சின்ன திருத்தம் அவனின் பார்வை மட்டும் தான் காதல் பார்வை அவளின் பார்வையில் எவ்வித சலனமும் இல்லை. இதை கவனிக்க தவறியது நம்ம ஹீரோ மட்டும் இல்லைங்க என்னுடைய வாசகர் இராஜேந்திரன் மருதநாயகம் சாரும் தான்😜😜😜.
அடுத்த நாளும் கதிர் அவளை பார்க்க..... அவள் ஒரு முடிவுடன் அவனை கீழே இறங்குமாறு சைகை செய்தால்,
அவள் அப்படி செய்ததும் இவனுக்கு குப்பென்று வேர்த்தது. நானா என்பதுபோல் அவன் சைகை செய்ய......
அவள் ஆம் என்பது போல் கண்ணசைத்தால்,
அவன் கீழே இறங்கிவிட்டான்.
அவனை ஒரு பார்வை பார்த்துவிட்டு அவள் முன்னே செல்ல......