(Reading time: 12 - 23 minutes)
Nenchangoodu yenguthadi
Nenchangoodu yenguthadi

அவளை முகம் கழுவி வர சொல்லிவிட்டு அவன் இருவர் அமரும் இருக்கையில் அமர்ந்தான்.

(என்னதான் அவள் வரும் வழியில் அழவில்லை  என்றாலும் அவள் முகம் சோகத்தை அப்பிக் கொண்டது உண்மை. இது போன்ற சமயங்களில் குளிர் நீரால் முகத்தை அடித்து கழுவும் போது நம்மை விட்டு துன்பங்களும் நீங்கியது போன்றதொரு மேஜிக். இது என்னுடைய சொந்த அனுபவம். இது போன்ற சமயங்களில் இந்த மேஜிக்கை நீங்களும் பயன்படுத்தி பாருங்கள் கண்டிப்பாக உங்கள் மனநிலையில் வேறுபாட்டை உணர்வீர்கள்.)

  அவள் வந்து அமர்ந்ததும் உணவு தயாராக இருந்தது. அவளுக்கு பிடித்த தயிர் சாதமும், உருளைக்கிழங்கு வருவலும் வழமையாக அவர்கள் வரும் சைவ உணவகம் இது. பிடித்த உணவை ஒரு வெட்டு வெட்டினாள்.ஏனென்றால் நமது அனிதா ஒரு சாப்பாட்டு பிரியை எது கிடைத்தாலும் இரசித்து உண்பவள்.சாப்பிடும் வேளையில் மட்டும் அவளது துன்பம் எதுவும் கண்ணுக்கு தெரியாது. அனைவருக்கும் இரவு ஒரு செயலில் ஈடுபடும் பொழுது அனைத்தும் மறந்து அதில் ஈடுபடுவர் அதுபோன்றுதான் அனிதா சாப்பிடும் வேளையில் அனைத்தையும் மறந்து விடுவாள்.

(இதுபோன்று நீங்களும் எந்த ஒரு செயல் செய்யும் பொழுது அனைத்தையும் மறந்து செயல்படுவீர்கள் என்ற கருத்தை பதிவிடுங்கள்)

   சாப்பாட்டை ரசித்து உண்ட பின் அப்பொழுது நான் உன்னை பார்த்தால் ஏன்டா நான் சாப்பிடுவதையே பார்த்துட்டு இருக்க உனக்கு வேணும் உனக்கு பண்ணிக்கோ...

அது வேற ஒன்னும் இல்லம்மா வேண்டுதல்,...

அவனை முறைத்தவள். தன் சாப்பிடும் பணியை தீவிரமாக செய்தாள். அவள் உண்டு முடிக்கும் வரை அமைதியாக அவளைப் பார்த்தவன் அவள் கை கழுவி வந்தவுடன் இப்ப சொல்லு என்ன பிரச்சனை.

கதிர்.

அவன் உனக்கு சரிப்பட்டு வர மாட்டான் ஆயிரம் தடவை சொல்லிட்டேன் அனி.

என்னால முடியலையே அச்சு.

முடியலன்னா ஃபர்ஸ்ட்  அந்த ஆபீஸ் விட்டு வெளியே வா.

நடக்கிறத பேசு அச்சு.

சரி இப்ப என்ன பிரச்சனை.

அவள் நடந்ததை  மேலாக்க கூறினாள்.

நான்தான் சொல்றேன்ல அனி. அவள் கல்யாணமே பண்ணிக்க மாட்டான்.

உன் வாழ்க்கை வீணாக போறத என்னால பார்க்க முடியாது அனி. நான் சொல்றதை நீ

24 comments

Leave your comment

In reply to Some User

Popular Reads

    Recent Updates

    Copyright © 2009 - 2025 Chillzee.in. All Rights Reserved.