இதற்கு முன் பார்த்த போது அவள் முகத்தில் தெரிந்த ஏதோ ஒன்று மிஸ்ஸிங்... அதற்கு பதிலாக குறும்பு நிறைய சேர்ந்து கொண்டது போல தோன்றியது.
அவளின் தூக்கத்தை கலைக்க விரும்பியவன் கண்களில் அவள் அருகில் இருந்த டேபிளில் இருந்த தண்ணீர் செம்பு பட்டது. நல்ல வேளை வாட்டர் பாட்டிலில் எடுத்து வராமல் செம்பில் எடுத்து வந்ததும் வசதியாக போய் விட்டது என்று எண்ணியவன் அவளை கடந்து போகும் போது வேணும் என்றே டேபிளை தட்ட செம்பு தண்ணீர் அவள் மீது பாதி கொட்டி ங்ங்ங்ங் என்ற சத்தத்துடன் கீழே விழுந்தது.
தண்ணீர் குளுமை ஜனனியின் தூக்கத்தை கலைக்க அந்த சத்தமோ அவளுக்கு திகிலை ஏற்படுத்த பயத்துடன் எழுந்தாள்.
கண் முன்னே நின்று அவளையே பார்த்துக் கொண்டு இருந்த ஜனாவை பார்த்ததும் ஏதும் சொல்லி இருப்பாரோ... கவனிக்காததால் கோபத்தை இப்படி காட்டுகிறாரோ என்று யோசித்தவள் என்ன சொல்வது என்று தெரியாமல் சாரி.... என்றாள்.
கவலைப்படாதே... இனி அடிக்கடி இப்படி சாரி கேட்க வேண்டியது வரும் என்றவன் அங்கிருந்து வேகமாக வெளியேறினான்.
ஆனால் போகும் போது அவன் பார்வை வேறு பக்கம் இருப்பதை உணர்ந்தவள் குனிந்து தன்னை பார்த்தாள். சேலை சற்று விலகி இருக்க அவள் வெண்ணிற இடையும் பெண்மையும் தெரிய வேகமாக சரி செய்து கொண்டாள்.
நான் பெட்ஷீட்டால் தலை வரை மூடி தானே இருந்தேன். அப்படி என்றால் என் ஆடை விலகியது தெரிய வாய்ப்பில்லை. அப்படி என்றால் எதற்காக திட்டி இருப்பான் என்று யோசித்து கொண்டே அமர்ந்து இருந்தாள்.
வெளியே சென்றவனோ இவள் என்னை மயக்க பார்க்கிறாள். இவளிடம் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும் என்று சொல்லி கொள்ள அவன் மனமோ அவள் இடையை பார்த்து தடுமாறியது நீதான்... அவளை பயமுறுத்தி எழுப்பி விட்டதும் நீதான்.. ஆனால் பழியை மட்டும் அவள் மீது போடுகிறாயே என்று சொல்ல அது... சரி நீயும் அவள் பக்கம் சாய்ஞ்சிட்டீயா.... என்றவாறே அங்கு இருந்து நகர்ந்தான்.
அந்த நாள் நல்ல படியாக தொடங்கியது. ஆபிஸில் வேலை இருப்பதாக கிளம்பி சென்றுவிட ஸ்வீனாவும் அஸ்விட் கூட வெளியே செல்ல வேண்டும் என்று சொல்லி விட்டு கிளம்பி விட்டாள். தனு ஜனனி சந்தியா மூவர் மட்டுமே இருந்தார்கள்.
ஜனா வீட்டில் இல்லை என்பதே ஜனனிக்கு ஆறுதலாக இருந்தது. மூவருக்கும் தேவையான மதிய உணவை ஜனனி வேகமாக ஆயத்தம் செய்து விட மூவரும் அமர்ந்து மகிழ்ச்சியாக