நான் கூட சொன்னேன் ஏன் அத்த அவசரப் படுறீங்கனு . அதுக்கு அவங்க நீ என் பொண்ண எப்பவும் கைவிடமாட்டேனு எனக்கு நம்பிக்கை இருக்கு சொன்னாங்க. அத்தை கரெக்டான முடிவுதான் எடுத்து இருக்காங்கனு இப்ப தெரியுது. சரி சரி நீங்க எல்லாரும் கிளம்புங்க.
அனைவரும் வாயடைத்து நின்றேன் பிரியதர்ஷினி உட்பட,
அது எப்படி பிரியாக்கு கூட உரிமை இல்லையா??
இல்ல அவங்க பொண்ணுக்கு இதுல உரிமை இல்லை. உங்களுக்கு இன்னும் டவுட் இருந்தா சொல்லுங்க. நான் என்னோட வக்கீலுக்கு கால் பண்றேன். இல்ல உங்க மூஞ்சி எல்லாம் பார்த்தா சந்தேகம் இருக்கிற மாதிரிதான் தெரியுது இருங்க நான் அவருக்கு கால் பண்ணி சொல்றேன்.
ஹலோ... வக்கீல் சுப்பிரமணியன் சார் -ங்களா நான்தான் அபிராமி அம்மாவோட தம்பி பையன் பேசுறேன். ஆமா ஆமா சார். நீங்க கொஞ்சம் வீடு வரைக்கும் வர முடியுங்களா..... ஓகே சார் ...தேங்க்யூ சார்,
இன்னும் அரை மணி நேரத்தில் வாக்கில் வந்து விடுவாரும்மா. அவர் வந்தவுடன் உங்களுக்கு எல்லாம் புரியும்.
பெண்கள் அனைவரும் வெளியே சென்றிருந்த தன்னுடைய கணவன்மார்களை அழைத்து விவரங்களை கூறினர்.
சொன்னதுபோல் அரைமணி நேரத்தில் வக்கீல் வீட்டை அடைந்தார்.
அனைவரையும் அமர வைத்து இவரும் ஹாலில் அமர்ந்தார். அபிராமிம்மா தவறிட்டாங்கனு தெரிஞ்சதும் வரணும்னு தான் நினைச்சேன். ஆனா ஒரு கேஸ் விஷயமா ஒரே அலைச்சல் வர முடில. நல்ல வேலை நீங்களே கூப்புட்டிங்க கதிர் தம்பி. கதிர் தான உங்க பேர்???
கரெக்ட் தான் சார்,
சாரி ஒரு நாள் தான் நாம மீட் பண்ணமா அதுதான்.
நோ பிராப்ளம் சார். அன்னக்கி அபிராமி அத்தை மாத்துன சொத்து விபரப் எல்லாம் சொல்லுங்க இவுங்ககிட்ட.
சொல்றேன் கதிர். பிரியா எப்புடி இருக்கீங்க.
நல்லாருக்கேன் அங்கிள்.
குட்.... எதையும் நினைக்க கூடாது உங்க அம்மா ஆசிர்வாதம் உனக்கு எப்பவுமே இருக்கும். இது தெரிஞ்சுதா ஒரு மாசத்துக்கு முன்னாடி கதிர கூப்பிட்டு எல்லா சொத்தையும் அவர்