அதன் பிறகு அவன் பேசிக் கொண்டே வந்தான். அவள் பேசவில்லை என்றாலும் அவன் பேசுவதை கேட்டு கொண்டு தான் வருகிறாள் என்பது புரிய மனதிற்குள் ஒரு சபாஷ் போட்டு கொண்டான்.
எப்படியோ கோடு போட்டாச்சு... இனி ஈஸியாக ரோடு போட்டு விடலாம் என்று மனதிற்குள் சொல்லி கொண்டே சந்தியா வீடு வந்ததும் அவளிடம் விடை பெற்று கொண்டு சைக்கிள் மிதிக்க ஆரம்பித்தான்.
சென்னை....
காலை விடிந்ததும் முதலில் எழுந்த ஜனனி மூவருக்கும் தேவையானதை தயார் செய்து விட்டு தனுவை எழுப்பி குளிக்க வைத்து சாப்பாடு கொடுத்தாள்.
காலை ஜாக்கிங் முடித்து வந்தவன் அதன் பிறகு இன்னும் வெளியே வராததை கண்டவள் அவன் அறை வாயிலையே பார்த்து கொண்டு இருந்தாள்.
அவன் வராமல் போகவே எழுந்து சென்றவன் வெளியே நின்று கொண்டே சாப்பாடு ஆறிட போகுது என்று சொல்லி கொண்டு இருக்கும் போதே வெளியே வந்தான்.
என்ன சமைத்து போட்டு மடக்கி விடலாம் என்று பார்க்கியா என்றான் குத்தலாக...
அவளுக்கு பதில் பேச வார்த்தைகள் வரவில்லை. அவளின் அமைதி இன்னும் அவனுக்கு சாதகமாக என்னை எதற்காக மேரேஜ் செய்த என்று ஞாபகம் இருக்கா... இல்லை நினைவு படுத்தனுமா...
என் பொண்ணு தன்சிகாவை பார்த்து கொள்ளதான்... நீ அவளுக்கு அம்மாவா இருந்தால் மட்டும் போதும். எனக்கு பொண்டாட்டியா எப்பவும் நீ இருக்க முடியாது.. நல்லா மனதில் வைத்து கொள்.
இடுப்பை காட்டி மயக்குவது.. சமைச்சு போட்டு இழுப்பது.. ஓரப்பார்வை பார்த்து சுத்தவிடுறது... இப்படி எதுவும் என்கிட்ட காட்டாத... பிகாஸ் அதற்கு மயங்குறவன் நானில்லை... எனக்குள் ஒருத்தி இருக்கிறாள். பக்கத்தில் இருந்தாலும் தூரத்தில் இருந்தாலும் அவளை பற்றி மட்டும் தான் எப்போதும் நினைப்பேன். அவள் எனக்கானவள்... நீ என்னை விட்டு தள்ளியே இரு என்றவனின் குரலில் தொடக்கத்தில் இருந்த உறுதி இல்லை... ஆனால் அதை கவனிக்கும் மனநிலையில் ஜனனி இல்லை. அதிர்ச்சியில் உறைந்து போகவில்லை என்றாலும் இதை அவள் எதிர் பார்க்கவில்லை என்பதை அவளது வியர்த்து வடியும் முகம் கோடிட்டு காட்டியது. வாசலில் நின்ற அவள் மீது இடித்து விடாமல் சற்று ஒதுங்கி முன்னேறியவனின் கண்கள் அவன் வீராப்பை தாண்டி பெண்ணவளின் இடையில் பட்டு ஏமாற்றத்துடன் தான் திரும்பியது.