தெரியாமல் பிஸினஸ் விஷயமாக என்றவள் அதற்கு மேல் பேச்சை வளர்க்காமல் அப்புறம் பேசுகிறேன் என்று சொல்லி விட்டு துண்டித்து விட்டாள்.
ஆனால் இங்கு ஜனனியின் மனம் தான் விடை தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தது. எப்படியாவது ஸ்வீனாவிடம் கேட்டு தெரிந்து கொள்ளலாம் என்று நினைத்தவளுக்கு ஏமாற்றமாக இருந்தது. ஆனால் சந்தேகமோ அவநம்பிக்கையோ ஏற்படவில்லை.
இப்படியே நாட்கள் ஓட ஸ்வீனா ஜெய்ப்பூர் சென்ற இரண்டு நாட்கள் கழித்து ஜனாவும் ஜெய்ப்பூர் செல்ல தயாரானான்.
ஜனனியிடம் நேரடியாக சொல்லாதவன் தனுவிடம் சொல்வது போல பிஸினஸ் விஷயமாக வெளியே செல்கிறேன். வர ஒரு வாரம் ஆகலாம் என்றான்.
ஜனனி கண்டு கொள்ளாமல் அமர்ந்து இருக்க தனு... அப்பா, இனி பிஸினஸ் விஷயமாக வெளியே செல்ல மாட்டேனு சொன்னிங்க என்றாள்.
சாரிடா இந்த ஒரு முறை என்றவன் விடை பெற்றான்.
ஒரு நாள் ஜனனி தன்சிகாவை மழலையர் பள்ளியில் விட்டு விட்டு திரும்பி கொண்டு இருந்த ஜனனியின் மொபைல் அழைத்தது. எடுத்துப் பார்த்தவள் அழைப்பது சசிதரன் (அதாங்க நம்ம சந்தியாவின் முறைப்பையன்) என்று தெரிந்ததும் அழைப்பை ஏற்றாள்.
அவளை சந்திக்க அருகில் உள்ள மாதா கோயிலுக்கு வர சொல்ல அவளும் அங்கு சென்றாள்.
அவன் டிராபிக்ல மாட்டிக் கொண்டேன்... வர அரை மணி நேரம் ஆகும் என்று மெசேஜ் செய்ய மணியைப் பார்த்து கொண்டு அமர்ந்து இருந்தவள் அருகே ஒரு ஐம்பது வயது மதிக்கத்தக்க பெண் வந்து அமர்ந்தாள்.
என்னா வெயிலு... சுட்டெரிக்குது என்றவாறே அமர்ந்தவள் ஜனனியை பார்த்து நட்புடன் சிரித்தாள்.
ஜனனி பதிலுக்கு சிரிக்க உன்னை இதற்கு முன் இங்கே பார்த்தது இல்லையே... புதுசா பக்கத்தில் குடிவந்திருக்கிங்களா என்றாள்.
இல்லை பெரியம்மா... என் பொண்ணை ஸ்கூல்ல விட வந்தேன். இப்போ என் கஸினுக்கு வெயிட் செய்கிறேன் என்றாள்.
அதற்குள் அந்த பெண் ஜனனியின் ஸ்கூட்டியையும் அதில் சிறிதாக இடம் பெற்றிருந்த கம்பெனி பெயரையும் படித்தவள் முகம் சுழிப்பதைப் பார்த்தவள் அந்த பெண் பேசுவதற்காக காத்திருந்தாள்.
ஏன்மா... இந்த கம்பெனியிலா வேலை செய்கிற ...
இல்லை... இந்த கம்பெனியை என் கணவர் தான் நடத்துகிறார் என்று சொல்ல விரும்பியவள் சொல்லாமல் ஆமா பெரியம்மா என்றாள்.