உரிமையை வேற குடும்பத்துக்கு மாற்ற வேண்டி வருமா?ன்னு ஒரு பிரச்சினை இருக்கு!..அதுக்கான முடிவை எடுக்கத்தான் இப்ப நாம இங்க கூடியிருக்கோம்” குலத்தை சேர்ந்த ஒரு பெரியவர் பேச்சைத் துவக்கினார்.
“ஏன்?...அதை மாற்ற இப்ப என்ன அவசியம்?” சுதாகரின் பங்காளி முறையைச் சேர்ந்த ஒருவர் உரத்த குரலில் கேட்டார்.
“பதினாறாம் நாள் எழவுத் தீட்டு முடிஞ்சதும் கோயிலைத் திறந்து பூஜையெல்லாம் பண்ணணுமல்ல?...அதுக்கு ஆள் வேணுமல்ல?” இன்னொரு பெரியவர் கேட்க,
“அதான் வேதாச்சலம் மகன் சுதாகர் இருக்காரே”
“அவரு டவுன்ல..காலேஜில படிச்சிட்டிருக்கறவர்!...படிச்சு முடிச்சதும் அங்கியே ஒரு வேலை பார்த்துக்கிட்டு டவுன்வாசி ஆனலும் ஆயிடுவார்!...அப்புறம் அவர் எப்படி அங்கிருந்து இந்த ஊர்க் கோயில்ல பூஜை செய்வார்?..ஆரம்பத்திலிருந்து இங்கே அப்பன் கூட இருந்திருந்தா..ஏதாச்சும் பூஜை புனஸ்காரங்களைப் பற்றித் தெரியும்...மந்திரங்கள் மனப்பாடம் ஆயிருக்கும்!...இப்ப அவரு இங்கிலீசிலா மந்திரம் சொல்லுவார்?””
“அதெல்லாம் அற்புதமாய்ப் பண்ணுவார்” என்ற சுதாகரின் பங்காளி, சுதாகர் பக்கம் திரும்பி அவனைப் பார்த்துக் கொண்டே, “தம்பி டவுன் படிப்பையெல்லாம் முட்டை கட்டி வெச்சிட்டு...இனி இந்த ஊருக்கு வந்திடுவார்!...வந்து....அவங்கப்பா செஞ்சிட்டிருந்த பூஜையை அவர் தொடருவார்” என்றார்.
அதிர்ந்து போன சுதாகர், “அண்ணே....ஒரு நிமிஷம்” என்று இடையில் புகுந்து சொல்ல,
“த பாரு தம்பி... “எனக்கு படிப்புதான் முக்கியம்...நான் கோயில் பூஜை செய்யவெல்லாம் வர மாட்டேன்”னு சொல்லிடாதே!...ஏன்னா...இந்த உரிமை சும்மா கிடைச்ச உரிமையல்ல?....உயிர்ப்பலி குடுத்து வாங்கிய உரிமை!...அன்னால் அது நம்ம கையை விட்டுப் போயிடக்கூடாது!” என்றார் இதுவரையிலும் அமைதியாயிருந்த ஒரு மூத்த மனிதர்.
அவர் என்ன சொல்கிறார்?...என்பது புரியாத சுதாகர் அவரையே கூர்ந்து பார்க்க, “ஆமாம்ப்பா....அந்தக் காலத்துல...அதாவது..நூறு வருஷத்துக்கு முன்னாடி....வட நாட்டுத் திருடனுக...நம்ம தமிழ் நாட்டுக்குள்ளார வந்து ஒவ்வொரு கோயிலாய்ப் போயி...அங்கிருந்த சாமி சிலைகளையும்...சாமி நகைகளையும் கொள்ளையடிச்சிட்டுப் போயிட்டிருந்தாங்க!...அவங்க கண் நம்ம உப்பாயம்மன் கோயில் மேலே விழுந்து...இங்க வந்து கொள்ளையடிக்க ஒரு நாள் குறிச்சானுக!...அதை முறியடிக்க எங்க தாத்தா...கோயில் காவலுக்கு ஆளை ஏற்பாடு பண்ணினார்!...அந்த ஆள் யாரு தெரியுமா?...உன்னோட முப்பாட்டன் “கொம்பேறித்துரை”...மரக் கொம்புகள்ல உட்கார்ந்துதான் காவல் காப்பாரு அவரு!...ஒரு நாள் அவர் காவல் காத்திட்டிருந்தப்ப...நடு ராத்திரில கிட்டத்தட்ட இருபது திருடனுக வந்து இறங்கிட்டானுக”