ஆனால்,
வாழ்நாள் முழுவதும் ரசிக்க முடியுமா?..
மனமும் அங்கும் இங்கும் தாவி குதிப்பது இயல்பு தானே...
சிறிது நேரம் வேடிக்கை பார்க்கலாம்..
அதை விட்டு விட்டு அதன் முன் மண்டியிட்டால்...
மனமும் அறிவும் இணைந்து
மனமொத்த வழி தேடினால்
அறிவென்னும் ஒளியில்
அடையலாம் தீர்வை....
ஆனால், மனதின் குழப்பத்திற்குள் மூழ்கி போனவளுக்கு யோசிக்க பிடிக்கவில்லை...
சிறிது நேரம் முன்பு சசிக்கு சொல்லிய வார்த்தைகள் இப்போது அவளுக்கே ரிப்பீட் ஆவது போல தோன்றியது... அந்த உரையாடலின் அந்த குறிப்பிட்ட பகுதி மீண்டும் மீண்டும் நினைவுக்கு வந்து அவளை வாட்டியது....
""""""""வேலையா... காதலா என்று முடிவு செய்வது பதில் இல்லா கேள்விக்கு விடை தேடுவது போல் இருக்கு...
பதில் இல்லா கேள்வி என்று நீ சொல்லும் கேள்விக்கு கூட தவறான விடை சொல்ல இயலுமே... அப்படி இருக்கும் போது தீர்வு இல்லா பிரச்சினை என்று நீ நினைப்பது தவறு. தீர்வு கண்டு பிடிக்க முடியவில்லை என்றால் ஏதாவது ஒரு வழி தேடு...
வழி தேடி என்ன செய்ய ஜனனி... இரண்டில் ஒன்றை தேர்வு செய் என்று உறுதியாக இருக்கிறாளே...
அதே அளவு உறுதியான இன்னொரு விஷயமும் இருக்கிறது. உன்னை தவிர வேறு யாரையும் திருமணம் செய்து கொள்ள மாட்டாள் என்பதும்....
அது எனக்கும் தெரியும்... ஆனால்
என்னடா ஆனா ஆவனானு சொல்லிட்டு இருக்க... சீக்கிரம் ஏதாவது ஒரு வழி தேடு... அந்த வழியில் சென்றால் உனக்கு தீர்வு கிடைக்கும்.
எனக்கு இப்போலா யோசிக்கவே பயமா இருக்கு ஜனனி...
ஏன்டா... ஏதாவது ராட்சத பேய் வருதா கனவில்...
ஜனனனனனினினி....
பின்னே என்னடா... யோசின்னா பயமா இருக்குனு சொல்ற....
இல்லை ஜனனி... சந்தியாகிட்ட கல்யாணம் பற்றி பேசினால் நீ வேலையை ரிசைன்