வரும் கண்டிப்பாக வரும் வந்தா சொல்றேன் சொல்றீங்க எனக்கு ஒன்னுமே புரியலையே!!!
அவனைப் பார்த்து சத்தமாக சிரித்தவள். அவன் தலையை கோதி உங்களுக்கு புரியலல அதுதான் எனக்கு வேணும்.
ஏங்க எனக்கு உங்க அளவுக்குலாம் மூளை இல்லைங்க. எனக்கு கொஞ்சம் தெளிவா சொல்லுங்களேன் ப்ளீஸ்.
எதையும் எதிர்பார்க்காம தான என்ன லவ் பண்ணீங்க...... எதையும் எதிர்பார்க்காம தான இந்த பிரச்சினையை சரி பண்ணிங்க...... அதே மாதிரி எதையும் எதிர்பார்க்காம தான கல்யாணத்தையும் ஃபிக்ஸ் பண்ணிங்க..... இப்ப எதையும் எதிர்பார்க்காம கல்யாணம் பண்ணிக்கோங்க...
ஒகே விடுங்க நீங்க ஒண்ணும் சொல்ல வேணாம்.
அப்புறம் இன்னொரு விஷயம் கதிர். என்னோட சொத்து பத்தி எதுவுமே உங்க வீட்டுக்கு தெரிய வேணாம். நான் வேலைக்கு போயிட்டு வர பணம் மட்டும் உங்க வீட்டுக்கு தெரிஞ்சா போதும். என்கிட்ட காசு இருக்குறதுக்காக என்கிட்ட அன்பா பழக கூடாது. உண்மையான அன்பா மனசுல இருந்து வர அன்பு தான் எனக்கு வேணும்.
கண்டிப்பா தர்ஷினி இத நானே உன்கிட்ட சொல்லலாம்னு நினைச்சேன்.
குட் கதிர்.
அப்புறம் எப்படி உங்க அத்த, சித்தியெல்லாம் கிளம்பிட்டாங்க.
நீங்க போட்ட போடுல நைட் ஓட நைட்டா எல்லா டிக்கெட்டும் ஓடிருச்சு இனிமே வர மாட்டாங்கன்னு தான் நெனைக்கிறேன்.
நேற்று நடந்ததை நினைத்து இருவரும் சிரித்தனர்.
எப்படிப்பா இப்படி எல்லாம் யோசிக்கிறீங்க. மாட்டிருந்தீங்க சங்குதான்.
எனக்கே தெரியலங்க உங்க கண்ணீர் பார்த்ததோன நானே கிரிமினல் ஆயிட்டேன்.
ம்ம்.... என்று அவள் முறைக்க...
சரி சரி இப்படியே பேசிட்டு இருக்கறதா... நினைப்பா கெளம்புங்க அங்க எல்லாரும் வெயிட் பண்ணிட்டு இருக்காங்க.
வெயிட் கதிர் பேக் எடுத்துட்டு வந்துடுறேன்.
அவள் பேக் எடுத்துட்டு வந்தவுடன் அவளை கையோடு கூட்டி சென்று சாமி அறையில் அவளுடைய அன்னை புகைப்படத்துக்கு நேராக விழுந்து வணங்கி அவரின் ஆசிர்வாதத்துடன் இருவரும் புறப்பட்டனர்.
அவனின் செய்கை கண்டு அவளுக்கு புல்லரித்தது.தான் சரியான இணையை தான்