ஸ்வேதாவை கண்டவள் முகத்தை இயல்பாக்கி குழந்தையை தடவிக் கொடுத்தாள்.
அசோக் தான் அந்த நிலைமை புரிந்து கொண்டு ஸ்வேதாவை கையில் வாங்கிவிட்டு தேன்மொழியிடம் நான் பாப்பாவ வீட்ல விட்டுட்டு வந்துடுறேம்மா அம்மா அப்பா தங்கச்சி இருக்காங்க பாத்துப்பாங்க பயப்படாத நான் இன்னும் அரை மணிநேரத்துல வந்துடறேன் என்று ஸ்வேதாவை வாங்கிக்கொண்டு அசோக் புறப்பட்டான்.
இவர்கள் இருந்த நிலையை கண்டவள் என்னசெய்வதென்று புரியாமல் ஒரு ஓரமாக நின்று தேம்பித் தேம்பி அழுது கொண்டிருந்தாள்.
கதிரை சமாளிப்பதே கார்த்திக்கிற்கு பெரும் போராட்டமாக இருந்தது. அப்பொழுதுதான் கார்த்திக்கிற்கு அவன் கால் பண்ணிய போது கூறிய கம்ப்ளைன்ட் விஷயம் ஞாபகத்துக்கு வந்தது அவனை விலக்கி ஒரு ஓரமாக அமரவைத்து விட்டு, ஸ்டேஷனை நோக்கி புறப்பட்டான்.
தேன்மொழி ஒருபுறம் தன் தோழியின் நிலை என்னவென்று தெரியாமலே கதறிக் கொண்டிருக்க......
கதிர் உயிரற்ற ஜீவனாக மனதளவில் உருகுலைந்து போயிருந்தான்.
Next episode will be published on 12th Feb. This series is updated weekly on Friday evenings.
தொடரும்