சொன்னான் என்று அவன் கூறி முடிக்க....இருவரும் அவனை சட்டை செய்யாமல் மருத்துவமனை உள்ளே பதைபதைப்புடன் ஓடினர்.
தலையில் கையை வைத்தவன் அவனும் அவர்களை நோக்கி ஓடினான்.
ரிசப்ஷனலிஸ்டிடம் விவரங்களை கூறி அனிதாவை அட்மிட் செய்திருக்கும் இடத்தை இருவரும் அடைந்தனர். அவர்கள் பின்னே கார்த்திக்கும் வந்தான்.
அங்கு கதிரின் இரு கண்களும் தீப்பிழம்பாக..... பைத்தியக்காரன் போல் இங்கும் அங்கும் நடந்து கொண்டிருந்தான்.
கதிரை கண்ட கார்த்திக் விரைவாக சென்று அவனை உளுக்க....
என்ன ஆச்சுடா.....எப்படி ஆச்சு ரெண்டு பேரும் வீட்ல தானே இருந்தீங்க.என்று கார்த்திக் கேட்க.....
தேன்மொழி அவனை ஒரு அதிர்ச்சி பார்வை பார்த்தாள்.அப்படி என்றால் இவனுக்கு அனிதா சென்ற இடம் தெரிந்திருக்கிறது இவ்வளவு நேரம் ஒன்றும் கூறாமல் இருந்து விட்டானே.என் அவனைப் பார்த்தவள் அடுத்ததாக கதிர் கூற போகும் பதிலுக்காக காத்து இருந்தாள்.
கார்த்திக் வந்துட்டியா..... அனிதாவ பாருடா..... நான் தான் காரணம் நான் தாண்டா அவள இப்படி ஆக்கிட்டேன். அவளுக்கு ஒன்னும் ஆகாதுல மச்சான். அவளுக்கு ஒன்னும் ஆகாதுடா.....எனக்கு அனிதா வேணும் டா மச்சான் அனிதா வேணும். என்னோட சந்தேக புத்தியால அவளை நான் கொன்னுட்டேன் டா அவ மனச நான் தான் கொன்னுட்டேன் டா.....அவ பாவம்டா என்னால எவ்வளவு கஷ்டம் அவ அனுபவிச்சிட்டா..... அவள நான் இனிமேல் தொந்தரவு பண்ண மாட்டேன் டா அவள பத்திரமா திரும்பி வர சொல்லுடா அவ பத்திரமா இருந்தாலே எனக்கு போதும்டா போய் சொல்லு மச்சான் போய் சொல்லுடா என்று கதிர் கார்த்திக்கின் சட்டையை பிடித்துக்கொண்டு உச்சஸ்தாயியில் புலம்ப........
அதனைக் கண்ட தேன் மொழிக்கும் அசோக்கிற்கும் என்ன நடந்ததென்று ஒன்றுமே புரியவில்லை கதிர் புலம்புவதை கண்ட ஸ்வேதா வீல் என்று அலற..... அந்த அலறல் சத்தத்தில் மூவரும் தன்னிலை பெற்றனர். கார்த்திக் கதிரை அணைத்து முதுகை நீவி சமன் செய்து கொண்டிருந்தான்.
அண்ணா..... அண்ணா .....என்று தேன்மொழி வாயை மூடிக்கொண்டு கதற.......
தேன்மொழி அழாதடா அனிதாக்கு ஒன்னும் இருக்காது.
அப்ப அவங்க என்ன சொல்றாங்கன்னா..... அப்ப அப்ப..... அனிதாக்கு பெருசா ஏதோ ஆயிடுச்சு போல அண்ணா...... எனத்தேன்மொழி தேம்பித்தேம்பி கூற......
நீ பொறுமையா இருமா ....என்ன நடந்துச்சுன்னு முதலில் கேட்போம்.இங்க பாரு ஸ்வேதா பயந்து மிரண்டு போய் இருக்கா....