தனிமையில் சென்றவர்கள்.பேச ஆரம்பித்தனர்.
என்னாச்சு எல்லாம் கூடி வர நேரத்துல எப்படி இப்படி ஆச்சு கார்த்திக்.
எனக்கும் எதுவும் தெரியல அசோக் எல்லாமே நல்லாத்தான் போயிட்டு இருந்துச்சு. கதிரும் கல்யாணத்துக்கு ஓகே சொல்லிட்டான். ஆனா ஒரே ஒரு முறை மட்டும் அனிதா கிட்ட பேசி கிளியர் பண்ணிக்கிறேன். அப்படித்தான் எங்கிட்ட சொன்னான். சரினு நானும் விட்டுட்டேன். ஆனா இன்னைக்கே பேசுவான்னு எனக்கு தெரியாது அசோக். மீட்டிங்னு சொல்லி அவளை கூட்டிட்டு போனான். அப்புறம் பார்த்தா இடையில் மெசேஜ் பண்றான் இன்னைக்கு நான் அனிதா கிட்ட பேச போறேன்னு நம்ம வீட்டுல தான் பேச போறேன்.
ஏதாவது விபரீதமா பேசிடுவான்னு பயந்துட்டு நான் வேணானு தான் சொன்னேன். ஆனால் அவள நான் பாத்துக்குறேன் சொல்லி என்னை சமாதானப்படுத்திட்டான். அவ்வளவுதான் எனக்கு தெரியும் அசோக். அப்புறம் தேன்மொழி அனிதாவ காணோம் எங்க இருக்கான்னு தெரியல ன்னு சொல்றப்பதா எனக்கே பயம் வந்துச்சு. நான் உடனே கதிருக்கு ட்ரை பண்ணேன் அது நாட் ரீச்சபிள் இருந்தது. அப்புறம் ஸ்வேதாவை கூப்பிட தேன்மொழி கூட போனப்பதான் எனக்கு கால் பண்ணான் இப்படி ஆயிடுச்சுனு.
அவன் இருக்க நிலைமையில அவன்கிட்ட என்னால இப்ப எதயும் கேட்கவே முடியலை அசோக்.என்ன நடந்துச்சுன்னு அனிதாவே சொன்னால்தான் உண்டு.
அசோக் தலையில் கை வைத்து விட்டான்.
ஆமா அசோக்கும் கார்த்திக்கும் பேசுறத பாத்தா ஏற்கனவே இரண்டு பேருக்கும் ஒருத்தர ஒருத்தரு தெரியுமா???
ஆமா தெரியும். கதிர் உடைய கல்யாணத்தை பற்றி அவன் அம்மாவிடம் கூறியவன் அத்தோடு விடவில்லை-.
அன்று தேன்மொழியிடம் தற்செயலாக விளையாட்டாக கூறியது போல் தான் தெரிந்தது. ஆனால் அனிதாவை பற்றி அறிந்திருந்திருந்தவன். அடுத்த நாளே அசோக்கை தொடர்பு கொண்டான்.
தேன்மொழி அசோக்கிடம் ஏற்கனவே அனிதா கல்யாண விஷயமாக கார்த்திக்-உடன் பேசியதை கூறியிருந்ததால், அசோக் மற்றும் கார்த்திக்கின் சந்திப்பு எளிமையாக நடந்தது.
அவர்கள் சந்தித்த பொழுதே அனைத்து விஷயத்தையும் பேசி முடித்திருந்தனர்.
அதாவது அனிதாவின் குடும்பத்திற்கு அலைபேசி மூலம் அழைத்து அனிதாவின் அம்மாவிடம் அசோக் அனைத்து விஷயத்தையும் கூறினான். அவனுடைய அம்மா கொஞ்சம் முற்போக்குவாதி. அதனால் அனிதாவின் ஆசையைப் புரிந்துகொண்டு சம்மதம் தெரிவித்தார்.