(Reading time: 8 - 15 minutes)
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2
இதோ ஒரு காதல் கதை - பாகம் 2

தெரில. இவனுங்க இனி என்ன என்ன கூத்துக் கட்டப் போறாங்களோ என்று! சொன்னாள். “அப்படிலாம் ஒன்னும் நடக்காதுடி!” என்றாள். பஸ்சில் வீடியோ பிளேயர் இருந்தது, முதலில் சில பக்திப் படல்களை ஒலிபரப்பிவிட்டு, “சாமி” திரைப்படத்தை டிரைவர் ப்ளே பண்ண, “திருநெல்வேலி அல்வாடா! என்று   பாடல் வரவும், சில மாணவர்கள் எழுந்து ஆட ஆரம்பித்தனர். அம்மா சொன்னது ரம்யாவுக்கு நினைவு வந்தது, “இதொண்ணும் நீ போற கேர்ள்ஸ் ஸ்கூல் டூர் இல்ல. பசங்கள்ளாம் இருப்பாங்க, டூர் தானே ஆட்டம் பாட்டம்னு இல்லாமல்  அமைதியா போய்ட்டு வா!” . ரம்யாவுக்கு பள்ளிவயதில் இருந்த குறும்புத்தனம் எல்லாம் இப்போதில்லை. நிதானமாக அமர்ந்திருந்தவள் தன் வாழ்க்கையைப் பற்றிய சிந்தனையில் இருந்தாள். தேவி நன்கு அயர்ந்து தூங்கிவிட, அவளைத் தன் தோளில் சாய்த்துக் கொண்டாள். “இது தானா இவன் தானா!” என்ற பாடல் ஒலிக்க, காதல் பூத்து திருமணம் நிகழ்ந்து மனமொத்த வாழ்க்கை வாழும் ஒரு பெண்ணின் கனவுப் பாடல். அவளுக்கும் அது பிடித்திருந்தது.தினேஷும் தானும் திருமணத்திற்காக என்ன பாடுபடப்போறோம் என்று நினைத்தவள் திருமணத்திற்குப் பின்பு எப்படி இருக்கும் என்றும் கற்பனையில் மூழ்கி இருந்தாள்.  திரைப்படத்தில் எல்லாம் எளிது, நிஜ வாழ்க்கையில் எப்படியோ என்றொரு கேள்வி அவளுக்குள். பொழுதும் விடிந்தது கோவையை அடைந்தனர். ஒரு எளிமையான ஹோட்டலில் குளித்துக் கிளம்ப ஏற்பாடு செய்திருந்தனர். காலை உணவை முடித்துவிட்டு அந்த கம்பெனியை அடைந்தனர். மின்னணு சாதனங்கள் தயாரிக்கும் ஒரு சிறிய கம்பெனி. அதைச் சேர்ந்த ஒருவர் இவர்களை வரவேற்று, தந்து கம்பெனியை சுற்றிக் காட்டினார். சிறிய புத்தகத்தை வைத்ததுக் குறித்துக் கொண்டிருந்தாள் ரம்யா.  எதுக்குடி இதெல்லாம் எழுதிட்டு இருக்க என்றாள் தேவி. ஸ்கூல்ல சுற்றுலா சென்றதைப் பற்றிக் கட்டுரை வரைகன்னு மிஸ் சொல்வாங்களே, அது மாதிரி இவங்களும் எழுதச் சொன்னா என்ன பண்றது. அப்படிலாம் எழுத சொல்லமாட்டாங்க என்றவளிடம், இல்லை ஹெச் ஒடிக்கு ரிப்போர்ட் வைக்கணும். யாரையாவது நோட்ஸ் எடுக்கச் சொல்ல நினைச்சேன். சொல்லாமலே ரம்யா செஞ்சுட்டு இருக்கா. குட் வொர்க் ரம்யா என்று லட்சுமி மேம் பாராட்ட, ரதியும் வாணியும் ஒருவரையொருவர் பார்த்துக் கொண்டிருந்தனர்.  மதிய உணவுக்குப் பின் கோவையில் இருந்து ஊட்டிக்குக் கிளம்பினர். மூணு மணி நேரத்துல ஊட்டில இருப்போம். அது வரைக்கும் எல்லாரும் சேர்ந்து எதாவது கேம்ஸ் கண்டக்ட் பண்ணுவோம் என்று ஒரு மாணவன் சொல்ல, மாணவர்கள் ஒரு அணி, மாணவிகள் ஒரு அணி என்று திரைப்படங்களின் பெயர்களை சைகையில் கண்டுப்பிடித்து விளையாட, பாடல் வரிகள் கண்டுபிடித்தல் , கல்லூரியில் பிறரை இமிடேட் செய்து யாரெனக் கண்டுபிடித்தல் என விளையாடிக் கொண்டு செல்ல, ரம்யா பேருந்தின் வாயிலில் சென்று அமர்ந்திருந்தாள். அது டூரிஸ்ட் பேருந்து என்பதால் கதவுகள் எல்லாம் எப்போதும் அடைக்கப்பட்டு இருந்தன. ஒரு

8 comments

  • :thnkx: தோழி! படிப்பது கல்லூரியில் என்றாலும் சிறுபிள்ளைத்தனம் நீங்காதவர்கள் நம் கதைக்காலத்தில் இருக்கும் மாணவர்கள் :lol:
  • நினைவலைகள் மகிழ்வானவை தோழி! நன்றி!
  • நன்றி தோழி! 2000 - 2010 வருடங்களில் கூட கல்லூரிகளில் டூர் இப்படி தான் இருந்தது. 2010க்கும் செல்போன் ரொம்பப் புழங்கவும் எல்லாமே மாறிப் போச்சு!
  • நன்றி தோழி! இல்லை இல்லை இது வேற காரணம் :lol:
  • [quote name=&quot;Arunaa&quot;]Nostalgic moments of college days and trips[/quote]<br />Exactly!!! I too felt the same 😃😃<br /><br />Interesting update ma'am 👏👏👏👏👏👏 wild animals ethavdhu vandhudicho :P poramai vera kalam irangi achi trip la ena ena aga pogudhu??? <br /><br />Look forward to see what happens next.<br /><br />Thank you.

Leave your comment

In reply to Some User

Copyright © 2009 - 2024 Chillzee.in. All Rights Reserved.