நானும் கடைக்கு வரேனு அழுவாங்க....
ஐயோ சாரி கதிர்.நீங்க போயிட்டு வாங்க போயிட்டு வாங்க நாம அப்புறமா பேசலாம்.
அவன் அவளிடம் சிரிப்புடன் விடை பெற்றான்.
இப்பொழுது தர்ஷினிக்கு மிகவும் குழப்பமாக இருந்தது. ஏனென்றால் அவள் இதுவரை இரண்டு பேருக்கு மட்டுமே சமைத்திருக்கிறாள். இப்பொழுது 20 பேருக்கு என்றதும், அவளுக்கு அளவு தெரியாமல் எப்படி செய்வது என்ன செய்வது என்று யோசனையில் இருந்தாள்.
ஏனென்றால் வீட்டில் இப்பொழுது கதிரின் அம்மா,அப்பா அவனுடைய தம்பி மற்றும் 3 வாண்டுகள் மட்டுமே இருந்தது. அதனால் அவள் மனதில் ஐந்து பெரியவர்களுக்கு என்று கணக்குப்போட்டு மூன்று வாண்டுகள் தானே அவங்களுக்கு என்று சிறியதாக அளவு வைத்து, சமைக்கத் தொடங்கினாள். இருந்தும் யாராவது வருவார்களா என்ற ஐயத்தில் கதிரிடம் குத்துமதிப்பாக எத்தனை பேருக்கு என்று கேட்டாள். அவன் சொன்ன கணக்கில் அவளுக்கு மயக்கம் வராத குறைதான். சட்னி செய்வதற்காக அவள் அரிந்து கொண்டிருந்த வெங்காயம் தக்காளியை அப்படியே விட்டாள். என்ன செய்வது என்ற யோசனையுடன் அவள் இருக்க.... சரியான நேரத்தில் கமலா சமையல் அறையில் நுழைந்தாள்.
உடனே தர்ஷினி அவருக்கு டீ-யை கொடுக்க......
அதனை வாங்கியவர் தர்ஷினி பார்த்து என்ன பண்ற.... என்று கேட்க,
தர்ஷினி மனதில் நிம்மதி வர பெற்றவளாய், கதிர் மாவு வாங்க போயிருக்காரு.
இட்லி செஞ்சா தொட்டுக்க என்ன செய்வீங்க.
சாம்பார் தான்.
ஓ.....அப்படிங்களா... அப்ப நீங்க சாம்பார் செஞ்சுருங்க... கதிர் வந்தோன நான் இட்லி ஊத்திடுறேன் என்று தர்ஷினி சமையலறையிலிருந்து எஸ் ஆகி விட்டாள்.
அதான பார்த்தேன். என்னடா நமக்கு ஒத்தாசைக்கு ஆள் வந்துருச்சுன்னு கொஞ்ச நேரத்துல ஏமாந்து புட்டேன் என்று கமலா சிலுப்பிக்கொண்டு சாம்பார் செய்ய ஆரம்பித்தார்.
தர்ஷினி காலை உணவு செய்வதற்குத்தான் சென்றாள். ஆனால் அவளுக்கு இது மிகவும் புதிதாக இருந்தது. இத்தனை பேருக்கு எப்படி சமைப்பது வீட்டில் வேறு பொருட்கள் குறைவாக இருந்தது. அவள் பருப்பு எவ்வளவு இருக்கிறது என்றும் பார்த்து விட்டாள். அது ஒரு அரை படி அளவே இருந்தது. இதை வைத்து எப்படி இத்தனை பேருக்கு சாம்பார் செய்வது என்று எண்ணி,கமலாவிடம் ஒப்படைத்துவிட்டு சென்றுவிட்டாள். கமலா அவளிடம் ஒழுங்காக பேசியிருந்தால் கேட்டு கூட செய்திருப்பாள். ஆனால் கமலா ஒட்டாமல் பேசியதால் சாம்பார் செய்யும் பணியை கைவிட்டாள்.
மாவை வாங்கிக் கொண்டு வந்தவன் நேரே சமயலறை செல்ல....அங்கு அவன்