அம்மாவை பார்த்ததும்,
அம்மா தர்ஷினி எங்க????
ம்ம்... மகாராணி ரூமுக்குள்ள இருக்காங்க....
மாவைக் கீழே வைத்துவிட்டு அவன் அறைக்குள் சென்றான்.
மந்திரத்தை போட்டு நல்லாத்தான் மயக்கி வச்சிருக்காளுங்க.... ம்கூம்...
அறைக்குள் சென்ற அவனது காதில் கமலாவின் பேச்சு தெளிவாக விழுந்தது. திரும்பி அன்னையிடம் வாதாட விரும்பியவன் பின்பு வேண்டாம் என்று தன்னை நிலைப்படுத்தி அறையினுள் சென்றான்.
கதிர் வந்ததும் தர்ஷினி,
வந்துட்டீங்களா கதிர்...... சரி இருங்க நான் போய் இட்லி ஊத்திட்டு வரேன் என்று அவள் எழ.....
அவள் கையை பிடித்தவன். தர்ஷி நாம வெளிய போறோம்.
எங்க கதிர்......என்ன திடீர்னு.... சொல்லவே இல்ல.... சரி இருங்க இட்லி ஊத்திட்டு சீக்கிரம் வந்திடுறேன் நாம போயிடலாம்.
இல்லங்க... இப்பவே போறோம். போலாமா நீங்க ஆல்ரெடி ரெடியாய் தான் இருக்கீங்க.
அவன் முகத்தை ஒரு நொடி பார்த்தவள் சரி என்று தலையசைத்தாள்.
இருவரும் கிளம்பி அறையை விட்டு வெளியே வர கதிரின் தம்பியும் அந்த வாண்டுகளும் உறங்கிய நிலையிலே இருந்தனர். சமையலறையில் கமலா மட்டும் சமைத்துக் கொண்டிருந்தாள். அருணாச்சலம் வெளியில் சென்றுவிட்டார்.
தர்ஷினி -க்கு அவர் மட்டும் தனியாக சமையல் செய்கிறாரே என்று வருத்தமாக இருந்தது. அதுவும் இத்தனை பேருக்கு என்றால் கண்டிப்பாக சாகசம் தான் என்று நினைத்துக் கொண்டாள்.
கதிர் தன் அன்னையிடம்,
அம்மா நாங்க வெளிய போய்ட்டுவறோம். என்று கூற....
அவர் ஒன்றும் கூறாமல் அவனை நிமிர்ந்து பார்த்துவிட்டு தன் வேலையை தொடர்ந்தார்.
தர்ஷினி க்கு மிகவும் சங்கடமாக இருந்தது.
கதிர்....என்று அவன் தோளை தர்ஷினி தொட,
அந்தக் கையை தன் கைக்குள் இருக்கி வைத்துக் கொண்டு, வாசலை நோக்கி நடை போட்டான்.வெளியே வந்தவன் தன் நண்பனுக்கு அழைத்து பைக் கேட்க.....
அவன் நண்பன் ஐந்து நிமிடத்தில் வந்து கொடுத்துவிட்டு சென்றுவிட்டான்.
தர்ஷினியும் அமைதியாக அவன் செய்கையை கவனித்தாள். அவன் ஏதோ தன்னிடம்