பேசுவதற்காக கூட்டி செல்கிறான் என்பதை மட்டும் அவள் யூகித்திருந்தாள்.
தர்ஷினி வண்டியில் ஏறுறிங்களா....
ஏறியவள் அனைத்தையும் ஒதுக்கி விட்டு அவன் மன சுணக்கம் நீங்குவதற்காக.....அவன் தோளைப் பிடித்துக் கொண்டாள்.
இதுவரை கதிருடன் பைக்கில் சென்றிருக்கிறாள் தான். ஆனால் அவனை தொட்டது கிடையாது. இதுவே முதல் முறை.
தர்ஷினி நினைத்தது போன்று கதிரின் முகத்திலும் புன்முறுவல் பூத்தது. அவளின் செய்கை நினைத்து, இதனை பின்பக்கம் இருந்து கண்ணாடியில் பார்த்து நிம்மதியுடன் பயணத்தை தொடர்ந்தாள்.
அவளை அழைத்துக் கொண்டு நேரே சென்றது ஒரு டிபன் சென்டர். அங்கு சென்று இருவரும் உணவருந்திவிட்டு, அவளது வீட்டுக்கு அழைத்து சென்றான்.
வீட்டில் யாரும் இல்லாமல் இருந்தாலும் தன் வீடு தன் வீடு தான். அந்த இடத்தில் கிடைக்கும் நிம்மதி எங்கும் கிடைப்பதில்லை. அதுவும் ஒரு பெண்ணிற்கு அவ்வளவு எளிதில் கணவனின் வீடு தன் வீடு ஆகிவிடாது. பெரியவர்கள் பார்த்து வைக்கும் திருமணத்தில் அனைத்து உறவுகளும் சுமுகமாக பேசிக்கொண்டிருக்கும் பொழுதும் கூட அந்த உணர்வு பெண்களுக்கு எளிதில் வந்து விடாது. அப்படியிருக்கையில் இவர்களின் திடீர் திருமணத்தில், அது மிகவும் கடினமான ஒன்றே.
தர்ஷினியின் வீட்டின் உள்ளே சென்றவர்கள் நேராக சென்று, தர்ஷினி அன்னையின் புகைப்படத்தின் முன் விளக்கேற்றி கும்பிட்டு வணங்கினர்.
பின்பு இருவரும் அமைதியாக சோபாவில் அமர்ந்திருக்க....
தர்ஷினியே மவுனத்தைக் கலைத்தாள். என்னாச்சு கதிர். எதுக்கு இங்க வந்திருக்கோம்.
தர்ஷீ காபி கிடைக்குமா....
அவனை ஒருமுறை முறைத்தவள். சமையலறை நோக்கி சென்றாள்.
சூடாக காப்பியை கொண்டு வந்தவள் கதிரிடம் நீட்ட.....
அதனை வாங்கி பருகியவன். அவளை அமர வைத்து அவள் மடியில் படுத்துக் கொண்டான்.
கதிர் என் பொறுமையை ரொம்ப சோதிக்கிறீங்க......
தர்ஷீ..... ப்ளீஸ்.... எனக்கு தூக்கம் வருது.
ஹலோ.... நியாயப்படி பார்த்தா எனக்குதான் தூக்கம் வரணும். நீங்க நைட் ஃபுல்லா நல்லா குறட்டை விட்டு தூங்குனிங்க.....