“என்னது?...சுத்தப் புரியாதவளா இருக்கியே!...அப்படி ஒரு வதந்தியைக் கிளப்பி விட்டாத்தானே இந்தக் காம்ப்ளக்ஸ்ல கடை வைக்க யாரும் வர மாட்டாங்க!...இங்க ஏற்கனவே இருக்கறவங்களும் காலி செஞ்சிட்டுப் போயிடுவாங்க!...”
“சரி...அப்புறம்?”
“அப்புறமென்ன?... “விஸ்வா டவர்ஸ்”ங்கற பேர் மறைஞ்சு போயி...எல்லோருக்கும் “பேய் டவர்”ன்னு சொன்னாத்தான் அடையாளமே தெரியும் என்கிற அளவுக்குப் போயிடும்!...அதனால காம்ப்ளக்ஸோட வேல்யூ அடிமாட்டு விலைக்கு போயிடும்!...அந்தப் சமயத்துல இதை வாங்கினா குறைந்த ரேட்டுக்கு வாங்கிக்கலாம் அல்ல?...அதுக்குத்தான்!” திவாகர் தன் யூகத்தை சொன்னான்.
“ஏங்க...நாலஞ்சு பேர் செத்திருக்காங்க...அதெல்லாம் பொய்யா?...”
“அது செரி...செத்தவங்கெல்லாம் யாரு?...பெரிய மல்டி மில்லியனர்ஸா?...சாதாரண செக்யூரிட்டிக தானே? அவங்க போனா...என்ன செத்தா என்ன?...யாரு கேட்கப் போறாங்க?”
அதைக் கேட்டு மிரட்சியுடன் விழித்தாள் பாக்கியம்.
“எனக்கென்னமோ நீ ரொம்ப பயப்படறியோ?ன்னு தோணுது..வேணா கட்டிப்பிடிச்சு முதுகுல தட்டிக் குடுத்து ஆறுதல் பண்ணவா?” குறுப்புப் பார்வையுடன் அவன் கேட்க
“தாராளமாய்ச் செய்ங்க!...ஆனா இப்ப இல்லை!..இன்னிக்கு ராத்திரில.!”
அவள் தன் சம்மதத்தை நாசூக்காய் வெளிப்படுத்தி விட “ஹேய்ய்ய்ய்” என்று குஷியுடன் கத்தி விட்டு, “கரெக்டா...பத்தரை மணிக்கு டூ வீலர் ஸ்டாண்ட் அருகில் நில்லு நான் வந்திடறேன்!” என்றான் திவாகர்.
“ம்ஹூம்...நான் முதலில் வந்து நிக்க மாட்டேன்!...நீங்க வந்து நில்லுங்க நான் உங்க கூட வந்து சேர்ந்துக்கறேன்!” என்றாள்.
“ஓ.கே...அதுவும் சரிதான்!” என்றவன், அவள் காதருகே வந்து,
“வரும் போது இந்தச் சுடிதாரெல்லாம் வேண்டாம்!...எனக்குப் பிடிச்ச அந்த ரோஸ் கலர் புடவையைக் கட்டிக்கிட்டு வா...என்ன?”என்றான் கிக் ஏற்றும் குரலில்.
வெட்கத்துடன் “சரி:யென்று தலையாட்டிய பாக்கியம், சில நிமிடங்கள் நெற்றியைச் சுருக்கிக் கொண்டு யோசனையில் ஆழ்ந்து விட்டு,
“நெஜமா சொல்லு திவா...இந்தப் பேய் சமாச்சாரமெல்லாம் கண்டிப்பா புருடாதானே?” நம்ப முடியாமல் மறுபடியும் கேட்டாள் அவள்.
“ராத்திரி அதையும் பார்க்கத்தானே போறோம்?” என்றான் திவாகர்.
பாவம், இளங்கன்று பயம் அறியாது, என்பார்கள். இங்கு இளம் காதலர்களும் பயம்