தொடர்கதை - நெஞ்சாங்கூடு ஏங்குதடி!!!!!! - 12 - தனுசஜ்ஜீ
அனிதா......
கைய எடுடானு சொன்னே......
அவன் அவளை பாவமாக பார்த்து நான் சொல்றதை கொஞ்சம் கேளு அனி.
இவ்வளவு நாள் நீ சொல்றத மட்டும் தான கேட்டுட்டு இருந்தேன். கேட்டது வர போதும்.
அனி நீ என்ன தப்பா நினைச்...
அவள் கையை போதும் என்பதுபோல் நீட்டி, ஆமா இவ்ளோ நாள் தப்பா தான் நினைச்சுட்டு இருந்தேன் இப்பதான் புத்தி வந்திருக்கு.
இல்ல அனிதா அது உன்னை டெஸ்ட் பண்றதுக்காக சொன்னது அது உண்மை இல்லை.
ஓ..... என்ன டெஸ்ட் பண்றதுக்கு சூப்பர். ஆமா நான் தெரியாம தான் கேக்குறேன் என்ன டெஸ்ட் பண்ற அளவுக்கு நீ என்ன அவ்ளோ யோக்கியமானவனா.....
அவன் தலையை குனிந்து அமைதியானான்😔😔😔.
உன் மூஞ்ச பாக்கவே எனக்கு சுத்தமா பிடிக்கல தயவு செஞ்சு இனி என் முன்னாடி வந்துறாத😡😡😡..... என்று கூறி முகத்தை அந்த பக்கம் திருப்பி படுத்துக் கொண்டாள்.
ஒரு அடிபட்ட பார்வையை அவள் மீது செலுத்தியவன் எழுந்து அமைதியாக சென்றுவிட்டான்.
கதிர் சென்றதும் எழுந்து அமர்ந்தவள் ஒரு கையை தலையில் வைத்து சாய்ந்து கொண்டாள்.
வெளியே வந்த கதிரிடம் வாங்க மாப்ள..... அனிதா கிட்ட பேசிட்டிங்களா அனிதா என்ன சொல்லுச்சு என்று அனிதாவின் அப்பா கேட்க...
அமைதியாக சிரித்தவன் பேசிட்டேன் அங்கிள். உங்ககிட்ட தான் பதில் சொல்லுவாங்க போல என் கிட்ட ஏதும் சொல்லல அங்கிள்.
அதெல்லாம் கவலைப்படாதீங்க மாப்பிள்ளை அவ ஓகே தான் சொல்லுவா என்று அனிதாவின் அம்மா மிகவும் உறுதியாக கூறினார்.
அதற்கும் சிறு சிரிப்பினை பதிலாக தந்தவன். சரி அங்கிள், ஆன்ட்டி எனக்கு வேலை இருக்கு நிறைய ஒர்க் பென்டிங் நான் போய்ட்டு வரேன் எதாவது வேணும்னா மறக்காம கூப்பிடுங்க.
சரிங்க மாப்பிள நீங்க வேலைய பாருங்க இவ்ளோ நேரம் இங்கிருந்து கவனிச்சிக்கிட்டதே பெருசு.
ச்ச .....ச்ச.... அப்படியெல்லாம் இல்ல அங்கிள். இது என்னோட கடமை அனிதாவ நான் பாத்துகாம வேற யார் பாத்துக்க போறா.....