வேண்டாமா... யோசிச்சிட்டு இருந்தேன்.
இதுல என்ன இருக்கு அவங்க ஒன்னும் நினைச்சிக்க மாட்டாங்க கார்த்திக். சரி வா நாம கேன்டின் போவோம்.இருவரும் இணைந்து கேன்டீன் சென்றனர்.
அந்த நாள் அப்படியே மருத்துவமனையிலே சென்றது.
அடுத்த நாள் காலை பொழுது அழகாக விடிய, அனிதாவை வார்டுக்கு மாற்றினார்கள். வார்டுக்கு வந்ததும் அனிதாவின் அம்மா அவளை விழுந்து விழுந்து கவனித்தார்.
அபிராமியும் காலையிலேயே வந்து உதவியாக இருந்தார். ஆனால் கதிர் வரவில்லை வேலை இருப்பதாக கூறி விட்டான்.
மாலை பொழுது நெருங்க .... அனிதாவுடன் அவளது அப்பா அம்மா மட்டுமே இருந்தனர்.
ஆமா அம்மா கேக்க மறந்துட்டேன் அக்கா ஏன் வரல.....
ஐயோ அதை ஏன்டி கேட்கிற அவ வரேன்னு ஒரே அழுக... அவளுக்கு கடைசியா செக்கப் பண்ணப்ப டாக்டர் ரொம்ப வீக்கா இருக்கா ன்னு சொல்லிட்டாங்க. அதனால கணேஷ் மாப்பிள்ளை கண்ணுக்குள்ள வச்சி பாத்துக்குறாரு. டிராவல் எல்லாம் பண்ண கூடாதுன்னு டாக்டர் சொல்லிட்டாங்க அதனால மாப்பிள்ளை விடல...ஆனா உங்க அக்கா ஒரே அழுகை அப்பறம் நாங்க தான் சமாதானப்படுத்தி விட்டுட்டு வந்தோம். இரு உனக்கு கால் பண்ணி தரேன்.
இல்லம்மா நான் அப்புறம் அக்கா கிட்ட பேசுறேன். அவ வராதது நல்லதுதான். என்ன பார்த்து பயந்துட்டே இருப்பா வயித்துல இருக்க பாப்பாக்கு நல்லதில்லலமா.
ஆமா அனிதா மாப்பிள தங்கமா தாங்குறாரு நீ அக்காவை பத்தி எல்லாம் கவலைப் படாத... உனக்கு ஒரு கல்யாணத்தை பண்ணி வெச்சுட்டா நிம்மதியா இருப்போம்.
இந்த பேச்சை எடுத்ததும் அனிதாவின் முகம் வேறாக மாறியது.
அதை கவனித்த வெங்கடாசலம் அனிதா அருகில் அமர்ந்து அவள் தலையை தடவியவாறு, சொல்லுமா நாங்க பாத்திருக்க மாப்பிள உனக்கு புடிச்சிருக்கா????? நீ ஒண்ணுமே சொல்லலனு மாப்பிள்ளை சொன்னாரு அதான் கேட்கிறேன்.
அப்பா நான் சொல்றேன்னு தப்பா நினைச்சுக்காதீங்க. எனக்கு அந்த மாப்பிள்ளை பிடிக்கல.
என்னாது என்று ஷாக் ஆவது சிவகாமியின் முறையாயிற்று.
வெங்கடாசலம் இதனை எதிர்பார்த்ததுபோல் சரிமா வேற மாப்பிள்ளை பாக்கட்டுமா.
அப்பா உங்களுக்கு காதல்னா பிடிக்காதுன்னு தெரியும். ஆனால் இது காதல் இல்ல பா.என்ன புரிஞ்சு என் வாழ்க்கை முழுசும் ஒரு நண்பனா அசோக் இருப்பான்ப்பா அவனையே