அந்தப் பார்வையில் இருவரும் அடங்க... முதலில் அசோக்கே பேச்சை தொடர்ந்தான்.
மொழிமா இங்கே வந்து உட்காரு உனக்கு எல்லாத்தையும் விளக்கமா சொல்றேன். உனக்கு ஞாபகம் இருக்கா அன்னைக்கு நாம அனிதாவை பத்தி பேசினமே நீ கூட கார்த்திக் சார் பேசினத சொன்னியே...
ஆமா...
ம்ம். அடுத்த நாள்தான் கார்த்திக் என்ன மீட் பண்ணாரு. ரெண்டு பேரையும் சேர்த்து வைக்கனும்னு நாங்க ரெண்டு பேரும் முடிவு பண்ணுனோம். அதுதான் உன்னோட ஆசையும் கூட அப்படித்தானே. அதனால நாங்களே ஒரு பிளான் பண்ணி அனிதாவோட அம்மாவுக்கு உண்மையை சொல்லிட்டோம். அவங்க அப்பாவ சரி பண்ணி கதிர் ஓட அம்மாவையும் பேச வச்சு, கதிரையும் ஓகே பண்ண வச்சு, நிச்சயம் வர பேச ஆரம்பிச்சுட்டாங்க. எல்லாமே நாம நெனச்ச மாதிரியே சுமுகமான போயிட்டு இருந்துச்சு. இந்த கதிர் ஏதோ டெஸ்ட் வைக்கிறேன் சொல்றவரைக்கும். இவன் அனிதாவ கூட்டிட்டு போயி என்ன பேசினானு தெரியல அதுக்குள்ள இப்படி ஆக்சிடென்ட் ஆயிடுச்சு.
ஆனா அனிதா வேற ஏதோ கதை சொல்லுறாணா....
அது பொய்னு உனக்கும் தெரியும் எனக்கும் தெரியும் வீட்டு பெரியவுங்களுக்காக அவ சொன்ன கதை. நம்ம கிட்ட சொல்ல முடியுற விஷயம்னா அவளே வந்து சொல்லுவா. அதுவரைக்கு நாம எதுவும் கேட்டுக்க வேணா ஒகே வாடா.....
ம்ம்...ஓகே அண்ணா இனிமே எது பண்றதா இருந்தாலும் என்கிட்டயும் கொஞ்சம் சொல்லிட்டு பண்ணுங்க. என்ன விட இவரு உங்களுக்கு பெருசா போயிட்டாருலணா என்று கார்த்திக்கை கை காட்டி கேட்க,
அந்த நேரம் பார்த்து இருமல் வந்தவன் போல் இருமி இருமி தொண்டையில் கைவைத்த தண்ணி குடிச்சிட்டு வர்றேன் என்று கார்த்திக் எஸ் ஆகி விட்டான்.
அவன் செய்கையை கண்டு அசோக் வாய்க்குள் சிரித்துக்கொள்ள..... தேன்மொழிக்கும் லேசாக இதழ்கள் மலர்ந்தது.
கார்த்திக் சென்றவுடன் அனிதாவின் பெற்றோர்கள் தேன்மொழி ,அசோக் அமர்ந்திருந்த இடத்திற்கு வந்தார்.
அவர்களை புன்னகை முகமாக வரவேற்று அமர வைத்தனர் இருவரும்.
சாப்பிட ஏதாவது வாங்கிட்டு வரவா அங்கிள் ,ஆன்ட்டி...என்று அசோக் கேட்க...
இல்லப்பா எங்களுக்கு இந்த நிலைமையில பசி எங்க எடுக்கும்.
ஏன் அங்கிள் அதுதான் அனிதா நல்லா இருக்கா இல்ல. நீங்க எதுக்கு மனசை போட்டு