அவன் தூங்கியதை உறுதி செய்தவள். அந்த இருட்டில் அவன் முகத்தை இரசிக்கும் வேலையில் இறங்கினாள்.
(கதிர் எப்புடி இருப்பாருனு இதுவரை நான் சொன்னது இல்லைல. இப்ப தர்ஷீ இரசிக்கிறத வச்சி தெரிஞ்சி கோங்க மக்காஸ் 💗)
ஆறடிக்கும் சிறிது குறைவான உயரம், மாநிறத்தில் ஆணழகன் தான்.அவனுக்கு அழகே அவனின் சிகை தான். அதனை அவன் கை கொண்டு கோதுகையில் ஒரு சில இளம்பெண்களாவது திரும்பி பார்ப்பார்கள் அதில் ஐயமில்லை. பட்டையான நெற்றி, அடர்ந்த புருவம், அதற்கு கீழ் அவனது கூர்விழிகள், விழிகளுக்கு ஏற்றவாறு கூர் மூக்கு, அதற்கு கீழ் அடர்ந்த மீசை, மீசைக்கு அடியில் தடியான உதடுகள், அவன் சிரித்தால் அவனது தெத்து பல் அழகாக தெரியும். ட்ரிம் செய்யப்பட்ட அவனுடைய தாடி. தவடையில் அழகான குழி.
அவனது அழகை சிறிது நேரம் இரசித்தவள். அவன் சிகையை சரி செய்து விட்டு வெட்க புன்னகையுடன் தூங்கிவிட்டாள்.
அழகான காலை நேரம் பக்கத்து வீட்டில் கேட்ட சுப்ரபாதமுடன் இனிமையாக விடிந்தது. முதலில் கண் விழித்த கதிர், போர்வையை விலக்க....தர்ஷீ குழந்தை போல் தூங்கிகொண்டிருந்தாள்.
அவளை பார்த்தவனின் முகத்தில் புன்னகை மலர, புத்துணர்ச்சியுடன் படுக்கையை விட்டு எழுந்து காலை வேலைகளை முடித்து விட்டு, சமையலறை சென்று ஃபிளாக் காஃபி போட்டான்.
காஃபியை எடுத்து வெளியே வந்தவன். தன்னுடைய மொபைலை தேட, அது மாலை அவன் வைத்த இடத்திலே மட்டையாகி இருந்தது.
அதனை எடுத்தவன். சார்ஜ் போட மறந்துவிட்டேனே என்று தன்னையே திட்டியபடி சார்ஜ் போட்டபடி ஆன் செய்ய....... அவனுடைய அப்பாவிடம் இருந்து ஐம்பதுக்கும் மேற்ப்பட்ட மிஸ்ட் கால்கள் வந்திருந்தது. அப்பொழுது தான் அவனுக்கு நினைவே வந்தது. வீட்டில் யாரிடமும் தான் இங்கிருப்பதை சொல்லவில்லை என்று,
காஃபி கப்பை கீழே வைத்தவன். நேராக தர்ஷினி ரூம் சென்று அவளை எழுப்பினான்.
தர்ஷீ......
ஆழ்ந்த உறக்கத்தில் இருந்தாள்.
அவள் அருகில் சென்றவன். தர்ஷீ கொஞ்சம் எந்திரிங்க என்று கொஞ்சம் சத்தமாக எழுப்ப .....
ம்ம்...... என்று மட்டும் சத்தம் வந்தது.