“சரியான பிடிவாதக்காரி பாக்கியம் நீ?” என்றவாறே அவள் பின்னால் நடந்தான்.
பவர்ஹவுஸ் ரூமை அடைந்ததும், பூட்டப்படாமல் வெறுமனே சாத்தியிருந்த அதன் கதவைத் திறந்து கொண்டு அவள் உள்ளே போக, ஆனந்த தாண்டவமிடும் மனதோடு அவனும் நுழைந்தான்.
“இப்பவாச்சும் திரும்பி என்னைப் பாரேன் பாக்யம்” கெஞ்சினான்.
அவள் மெல்ல...மெல்ல...மெல்ல...மெல்ல...கழுத்தைத் திருப்ப,
அவள் முகத்தைப் பார்த்ததும் அலறினான் திவாகர்.
“ஏய்...நீ...நீ...அந்த மாதேஸ்வரிதானே?” கேட்கும் போதே அவன் குரல் நடுங்கியது.
“ஆமாண்டா நாயே!...ஏழைக் குடும்பத்துல பொறந்து, வயித்துப் பாட்டுக்காக உன்னோட ஃபேன்ஸி ஸ்டோருக்கு வேலைக்கு வந்த என்னைய...பேசிப் பேசியே மயக்கி...உன்னோட இச்சையைத் தீர்த்துக்கிட்டே!...கடைசில என் வயித்துல ஒரு சிசு உருவானதும், நான் வந்து உன்கிட்டச் சொல்லிக் கதறினப்ப
“எவன்கிட்டேயோ ஏமாந்திட்டு...என்னைப் பலிகடா ஆக்கப் பாக்கறியா?”ன்னு சொல்லி என்னைய வேலை விட்டு நீக்கினே...நான் உன் காலைப் பிடிச்சுக் கெஞ்சினப்ப எட்டி உதைச்சே!...கழுத்துல தாலி இல்லாம வயித்துல ஒரு புள்ளையைச் சுமந்துக்கிட்டு இந்தச் சமுதாயத்தை எதிர் கொள்ளப் பயந்து நான் தற்கொலை பண்ணிக்கிட்டேன்!...அதுவும் சும்மா சாகலை “ஆவியா வந்தாவது உன்னைப் பழி வாங்கியே தீருவேன்!”ன்கற ஒரு சபதத்தோடதான் செத்தேன்...இப்ப அந்தச் சபதத்தை நிறைவேத்த வந்திருக்கேன்!...நிறைவேத்தியே தீருவேன்!” அவள் குரல் திடீரென உயர,
தப்பி ஓடி விடும் எண்ணத்தோடு திவாகர் கழுத்தைத் திருப்பி, அந்தப் பவர்ஹவுஸ் அறையின் கதவைப் பார்க்க,
தன் பார்வையால் அந்தக் கதவைச் சாத்தித் தாழிட்டாள் ஆவியாய் நின்றிருந்த மாதேஸ்வரி.
இருந்தாலும் அதை முயற்சித்தே பார்த்து விடுவது என்கிற எண்ணத்தில் ஓடிப் போய் அந்தத் தாழ்பாளைத் திறக்க முயன்றான். ம்ஹூம்ம்...அவன் பலம் அங்கு பலனாகவில்லை.
மெல்ல மெல்ல நடந்து அவனை நெருங்கி வந்தது மாதேஸ்வரியின் ஆவி.
“வராதே...வராதே...என்னை ஒண்ணும் பண்ணிடாதே!” கெஞ்சினான்.
அருகில் வந்த அந்த மாதேஸ்வரியின் முகத்தில் கண்கள் இருந்த இடத்தில் இரண்டு