தொடர்கதை - புத்தகம் மூடிய மயிலிறகே...! – 11 - பத்மினி செல்வராஜ்
டிங்...டிங்...டிங்... என்ற கோயில் மணி எங்கோ தொலைவில் ஒலிக்க அதன் இனிய கானம் காற்றோடு கலந்து வந்து மிருணாவின் செவிகளையும் தொட்டுச் சென்றது.
நீண்ட நாட்களுக்குப் பிறகு அன்றுதான் அவள் எல்லா குழப்பங்களையும் பின்னுக்கு தள்ளி நன்றாக அசந்து உறங்கிக் கொண்டிருந்தாள்.
அப்படி உறங்குபவள் செவிகளில் மீண்டுமாய் ஆலய மணி ஓசையும் அதனை ஒட்டி காலை நேரத்திற்கே உரித்தான பலவித சத்தங்களாலும் அவளுடைய தூக்கம் கலைந்து போனது.
கண்களை தேய்த்துக் கொண்டே படுக்கையிலிருந்து எழுந்து அமர்ந்தாள் மிருணா.
மெத்து மெத்தென்று அவளை உள்வாங்கி இருந்த அந்த இலவம் பஞ்சு மெத்தை, இன்னும் கொஞ்ச
...
This story is now available on Chillzee KiMo.
...
ண்டாள்.
ஏற்கனவே நேரமாகிவிட்டதால் அவசரமாய் குளித்துவிட்டு தலையில் ஒரு டவலை சுற்றி கொண்டு வெளிவந்தவள் மாற்று உடையை அணிய யோசனையாக அங்கிருந்த வாட்ரோப் ஐ திறக்க அப்படியே அதிசயித்து போனாள்.