காவ்யா. “இவளைப் போல ஜொள்ளுப் பார்ட்டி எந்த நாட்டிலேயும் இருக்க மாட்டங்கப்பா”
“உடம்புக்கெல்லாம் ஒண்ணுமில்லை!” என்றான். சிரிப்புடன்.
“ஓ.கே....அப்புறம் லன்ச் அவர்ல பேசுவோம்” சொல்லி விட்டு அவள் நகர்ந்ததும், வேக வேகமாய் எழுந்து வந்தாள் காவ்யா, “என்ன சார்...கடலை போட்டு முடிச்சாச்சா?...இல்லை இன்னும் இருக்கா?” வந்தவுடன் கேட்டாள். முகத்தில் கடுகு தாளிப்பு.
“ஒண்ணுமில்லைங்க...நேத்திக்கு ஏன் வரலை?”ன்னு விசாரிச்சாங்க” சமாளித்தான் ரவீந்தர்.
“அதைப் பத்தி அவளுக்கென்ன?...”என்று பற்களைக் கடித்துக் கொண்டு சொன்ன காவ்யா, “ஆமாம்...ஏன் வரலை?”
கோகிலாவிடம் சொன்ன அதே காரணத்தை இவளிடமும் சொன்னான்.
“சரி...நான் என் சீட்டுக்குப் போறேன்...போறதுக்கு முன்னாடி ஒரு எச்சரிக்கை...அந்த கோகிலா கூட அளவாய்ப் பழகுங்க!...ஆபீஸ்ல உங்க ரெண்டு பேரைப் பத்தியும் வேற மாதிரி பேச ஆரம்பிச்சிட்டாங்க” என்று ஒரு பொய்யை எடுத்து வீசினாள்.
“வேற மாதிரி?”ன்னா?” வேண்டுமென்றே தெரியாதது போல் கேட்டான்.
“ம்...ரெண்டு பேரும் லவ்வர்ஸ்”ன்னு கிசுகிசுக்கறாங்க”
“ஸோ வாட்?...அதிலென்ன தப்பு?” என்று அவன் சாதாரணமாய்ச் சொல்ல, வெகுண்டெழுந்தாள் அவள்.
“அப்ப கோயமுத்தூரிலிருந்து டிரான்ஸ்பர் வாங்கிட்டு வந்தவ கேனச்சியா?” வாய் விட்டே கேட்டு விட்டாள்.
“விருட்”டென்று தலையைத் தூக்கிப் பார்த்தவன், “என்ன சொன்னே?..என்ன சொன்னே?” திருப்பிக் கேட்டான்.
“கோல்டன் வேர்ட்ஸ் கெனாட் நாட் பி ரிபீட்டட்”
அவளை வெறித்துப் பார்த்தவன், “காவ்யா...உன் கூட நான் கொஞ்சம் தனியா பேசணும்” என்றான்.
“நானும்தான்” என்றவள், “இன்னிக்கு ஈவினிங் எங்காவது போய் பேசுவோமா?” கேட்டாள்..
ஈவினிங் கோயமுத்தூரிலிருந்து அந்த கோகுல் கோவிலுக்கு வந்து சில டிராமக்கள் போடுவான் என்பதால், “இன்னிக்கு வேண்டாமே?” என்றான்.
“ஏன்?...இன்னிக்கு அந்த கோகிலா வரச் சொல்லியிருக்காளா?” கோபமாய்க் கேட்டாள் காவ்யா.
“சேச்சே..அப்படியெல்லாம் ஒண்ணுமில்லை”
“அப்ப...வாங்க!...இன்னிக்கே பேசுவோம்” என்றாள் விடாப்பிடியாய்.
“ப்ளீஸ்...இன்னிக்கு வேண்டாம் காவ்யா” பரிதாப முகத்துடன் கெஞ்சினான். அவனைப்