அவள் கேட்க, பதில் சொல்லமுடியாமல் கண்களைப் பார்த்தவாறே ஒரு நிமிடம் நின்றவன். இந்த கண்களைப் பார்த்தா என்னால் இவளை விட்டுப் போகவே முடியாது போல என்று நினைத்துக் கொண்டு, சரி நான் கிளம்புறேன். நைட்டு கால் பண்ணு என்று விடைபெற்றான். அவன் பிரிவதே அவளுக்குப் பிடிக்கவில்லை.
கல்லூரிக்குள் நுழைந்தாள், காலையிலே மேம் அவளைப் பார்த்திருந்ததால் கேம்பஸில் ரம்யா எங்கேயோ ஆண்டு விழா வேலை பார்த்துக் கொண்டு இருக்கிறாள் என்றே தோழிகளிடம் சொல்லியிருந்தார் போலும். யாரும் அவளிடம் எங்கே போனாள் என்று எதுவும் கேட்கவில்லை. விழா நடந்த ஆடிட்டோரியத்தில் அமர்ந்தாள். பெயர் கூப்பிட்டதும் அனிச்சையாக மேடையேறி பரிசு வாங்கி புகைப்படத்திற்கு நின்று கீழிறங்கிவிட்டாள். முதல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு மெடல் மட்டுமில்லாமல், கூடவே கல்லூரியின் பெயர் பொறித்த ஒரு பெரிய கேடயத்தை வழங்கினர், தன் தோழிகளிடம் மெடலையும், கேடயத்தையும் காண்பித்தபின், அவள் ஹேண்ட்பேக்கில் மெடலை வைத்தாள். ஆனால் கேடயத்தை வைக்க முடியவில்லை. விழா நிறைவுற, கேடயத்தை மட்டும் கையில் பிடித்தவாறே வீட்டுக்கு எடுத்துச் சென்றாள். அங்கே தெருவே விழாக்கோலம் போலிருக்க, அண்டை அயலாருக்கெல்லாம் அப்பா கேக் வாங்கிக் கொடுத்திருப்பதைக் கண்டாள். “ரம்யாம்மா,உங்க பொண்ணு பெரிய ஷீல்ட் வாங்கிட்டு வர்றா!” என்று பக்கத்து வீட்டில் இருந்த அக்கா சொல்ல, அம்மா வாசலுக்கு வந்தார். மகிழ்ச்சியுடன் அம்மாவும், பெருமிதத்துடன் அப்பாவும் அவளை அழைத்தனர். அப்பா கையில் மெடலையும் கேடயத்தையும் வாங்கிப் பார்த்துவிட்டு, இது மாதிரி எல்லா வருடமும் வாங்கணும் என்று சொல்ல, அதைக் கொடுங்க என்று பார்த்த அம்மா இரண்டையும் எடுத்துக் கொண்டு சித்திகளிடம் பெருமையாகக் காட்டச் சென்றுவிட்டார். என்ன நீ பரிசு வாங்குற காட்சியைத் தான் நாங்க நேரில பாக்க முடியல என்று அப்பா சொல்லிவிட்டுக் கடைக்குக் கிளம்பிவிட, போன் அடித்தது. சத்யா பேசினாள். என்னடி பர்ஸ்ட் ப்ரைஸ் வாங்கிட்டு வந்திருக்க. ட்ரீட் கேக்கலாம்னு பார்த்தால் டல்லடிக்குது உன் வாய்ஸ் என்றாள்.
சத்யா ரம்யாவிடம் கல்லூரி விழா எப்படிப் போச்சு என்று கேட்க, தினேஷுடன் மதுரைக்குக் கோவிலுக்குச் சென்றதைப் பற்றி ரம்யா சொன்னாள். ஒவ்வொரு பள்ளி ஆண்டு விழாவிலும் தான் பரிசு வாங்கும் போது, தன்னைப் படிக்க வைக்கும், பெற்றோருக்குக் கிடைக்கும் கவுரவம் அது என்று நினைப்பேன் சத்யா, இன்னிக்கு பங்க்ஷனுக்கு அம்மா,அப்பா வரவில்லை. பள்ளி நாட்களில் எப்பவுமே நான் ப்ரைஸ் வாங்கினா அவங்க என் கூட இருப்பாங்க, இன்னிக்கு தினேஷுடன் வெளில போறதுக்காக விழாவுக்கு அப்பாவும் அம்மாவும் வரவேண்டாம்னு சொல்லிட்டுப் போய்ட்டேன். வந்து பார்த்தா, அவங்க என் பரிசுக்காக இங்கே எல்லாருக்கு கேக்