வாங்கிக் கொடுத்துக் கொண்டாடிட்டு இருக்காங்க. என் படிப்புக்கும் இன்னிக்கு நான் வாங்கின பரிசுக்குமே முக்கிய முதல் காரணமா இருக்கிற அம்மா அப்பாவை ஏமாற்றியதற்காக எனக்கே என் மேல கோபமா வருது சத்யா என்றாள் ரம்யா. சத்யா அவளை ஆறுதல்படுத்தும் விதமாக, “நீ இப்படியே உன் படிப்பில் கவனம் செலுத்தி, நல்ல எதிர்காலத்தை அமைச்சிக்கிட்டா, உன் அம்மா அப்பாவும் சந்தோஷமா இருப்பாங்க, நீயும் அவங்ககிட்ட தினேஷைப் பற்றித் தெளிவாப் பேசிப் புரிய வைக்க முடியும். கவலைப்படாம இரு! நாளைக்குப் பார்ப்போம்! எதையும் யோசிச்சு மனசைக் குழப்பிக்காம நிம்மதியா படுத்துத் தூங்கு! குட் நைட்!” தினேஷிடம் பேசத் தோன்றியது. டயல் செய்தாள், போனை அவன் எடுக்கவில்லையென்றதும், அவன் களைப்பில் சீக்கிரமே தூங்கிவிட்டான் போலுமென்று நினைத்தவள், தனது அறைக்குள் சென்று படுத்தாள். அம்மா அப்பாவை ஆண்டு விழாவுக்குத் தான் பொய்சொல்லி வர முடியாமல் செய்தது பற்றியே யோசித்து ஒரு குற்றவாளியாகத் தன்னை நினைத்த ரம்யா அழ ஆரம்பித்தாள். அழுதவாறே படுத்தவளின் கண்கள் மூடவும் நினைவு கோவிலின் அனுபவங்களின் மேல் செல்ல, ஏதேதோ கனவுகளில் சஞ்சரித்தபடியே தூங்கிப் போனாள்.
மறுநாள் தினேஷ் வரவில்லை. ராபினுக்கும் தெரியவில்லை. மாலையில் போய் போன் செய்தால் தான் தெரியும். ஏன் அவன் வரவில்லை என்று ஒரே தவிப்பாக இருந்தது. முதல் வேலையாக போன் செய்தாள். வேறொரு ஆண் குரல். பயந்து வைத்துவிட்டாள். பிறகு தினேஷ் போன் பண்ணவும் அவனின் குரல் கரகரத்து இருந்தது. என்னாச்சு என்றவளிடம், பீவர்னு பொய் சொல்லி லீவ் போட்டேன், நிஜமாவே பீவர், தொண்டை வலி, அதான் வீட்ல இருந்து அம்மா ரெஸ்ட் எடுக்க சொன்னாங்க. ஊர்ல இருந்து ராஜேஷ் வந்திருக்கான். அதான் அவன் கூடவும் கொஞ்சம் டைம் பாஸ் பண்ணலாம்னு. நீ ரெஸ்ட் எடுடா! உடம்ப பார்த்துக்கோ தினேஷ்! என்றவள், முந்தின குரலின் வித்தியாசம் நினைவுக்கு வந்து, அச்சச்சோ இதுக்கு முன்னாடி நான் போன் பண்ணப்ப உங்க அண்ணன் தான் எடுத்து இருப்பங்களோ. ம். அவன் தான், யாரோ கால் பண்ணிட்டு பேசலன்னு வந்து என்கிட்டே சொன்னான். அதான் உனக்கு நானே உடனடியா போன் பண்ணேன். உங்க அம்மா இருக்கும் போதா சொன்னாங்க. ஆமா என தினேஷ் சொல்லவும்
அம்மா ஒன்னும் சொல்லலியா என்று ரம்யா கேட்க
பாரு ராஜேஷ்! போன் பண்ணவங்க நம்மகிட்டலாம் பேசமாட்டாங்க, தினேஷ்கிட்ட மட்டும் தான் பேசுவாங்கன்னு சொல்லிட்டுச் சிரிச்சாங்க.
அம்மாவுக்கு நம்ம விஷயம் தெரியுமா
தெரியும். ஆனால் ஒன்னும் கேட்க மாட்டாங்க. நான் தப்பான எதையும் செய்யமாட்டேன்னு