ஆமாப்பா அதான் நான் அனிதா கிட்ட சொன்னேன். அதுதான் உங்களுக்கு கஷ்டம் கொடுக்க வேண்டாம்னு டாக்ஸி புக் பண்ணிடுச்சி.
இதுல என்ன கஷ்டம் இருக்கு அங்கிள். எப்படி இருந்தாலும் நான் கார்ல தான் வர போறேன். அப்புடியே உங்களையும் சேர்த்து கூட்டிட்டு போறதுல எனக்கு என்ன கஷ்டம்.
பரவால்ல எங்களுக்கு யாரையும் கஷ்டப்படுத்த பிடிக்காது. நீங்க உங்க காரிலேயே வாங்க நாங்க டாக்ஸில வரோம்.
அனிதா பேசியதில் கதிர் டென்ஷன் ஆகி விட்டான். ஏனென்றால் அனிதா வீட்டில் உள்ளவர்களும் அவள் பேசியது சரி என்பதுபோல் நின்றனர்.
உடனே கதிர் அசோக்கிற்கு கால் செய்ய அசோக்கிடம் பேசிய அடுத்த நொடியே கதிர் முகத்தில் மீண்டும் புன்னகை ஒட்டிக்கொண்டது
அவனை இரகசியமாக நோட்டமிட்டு கொண்டிருந்தவளின் முகத்தில் இப்போது குழப்பம் மேலோங்கியது. யார் கிட்ட பேசிருப்பான். எதிர்ப்புறத்தில் என்ன சொல்லி இருப்பாங்க. எதுக்கு இவன் திரும்பவும் ஸ்மைல் பண்றான்.
அனிதாவின் மனக்குழப்பத்திற்கு அடுத்த நொடி பதில் கிடைத்தது.
ஏனென்றால் அசோக்கின் குடும்பத்தினரும் இன்றுதான் தங்கள் ஊருக்கு செல்ல இருந்தார்கள். அவர்களை தனியே பஸ்சில் அனுப்பி வைக்கலாம் என்று தான் அசோக் எண்ணியிருந்தான்.ஆனால் கதிர் அசோக்கை அழைத்து அனிதா செய்த காரியத்தை கூறியதும் அவன் தான் இந்த பிளானை போட்டு கொடுத்தான்.
இவர்கள் இருவரின் திட்டப்படியே அசோக்கின் குடும்பமும் அனிதாவின் குடும்பத்தோடு ஒன்று சேர்ந்தது. இருவரும் ஒரு ஊர்காரர்கள் என்பதால் கதிருக்கு மிகவும் வசதியாகிப் போயிற்று.
உடனே அனிதாவின் அப்பா கதிர் தம்பி நீங்க ஒத்தையா போக கவலைப்படாதீங்க. இதோ இவுங்களை நீங்க கூட்டிட்டு வந்துடுங்க. நாங்க டாக்ஸ்-ல வந்துவிட்டோம் என்று கூற,
கதிருக்கு சப்பென்று ஆனது. இந்தப் பிளானும் சொதப்பிடும் போலயே என்று அவன் எண்ணிக் கொண்டிருக்க.... அசோக் கதிர் அருகே வந்து ஒரு பிளான் போட்டு கொடுத்தான்.
கதிர் முகத்தில் அப்போதுதான் ஒளி வந்தது.
கதிரும் சிரித்த முகமாக சரிங்க அங்கிள். நீங்க டாக்சி - ல வாங்க. நாங்க இந்த வண்டில வந்துடுறோம் என்று கூறிவிட்டான். அனைவரும் டாக்ஸிக்காக காத்திருந்தனர். டேக்ஸியும் வந்துவிட்டது.
இரு குடும்பத்தினரும் வண்டியில் ஏறி அமர்ந்தனர். அனிதா டாக்ஸியில் ஏறி ஜன்னல்