பெண்களும் அருகில் கூட,ரதி “உங்க எதிர்காலம் எப்படியிருக்கும்னு நீங்க ஏஜ் அட்டென்ட் பண்ண டே வச்சே வாணி சொல்லிருவா! கிராமத்துல இருக்கிற அனுபவப்பட்ட பெண்கள் அவளுக்குச் சொல்லியிருக்காங்க! என்றாள். பெண்கள் அனைவரும் அடுத்தடுத்து அமர்ந்திருக்க, ஒரு மாணவி, நான் திங்கள் கிழமை என்றாள், அப்போ உனக்கு மங்கலமான வாழ்வுதான் என்ற வாணியிடம், வெள்ளிக்கிழமை என்று ஒரு மாணவி சொல்லவும், மல்லிகைப்பூ போல மணக்கும் வாழ்வு என்றாள். மற்றொரு மாணவி புதன் என்று சொல்ல, வதவதன்னு புள்ளைங்க பொறக்கும் என்று வாணி சொல்ல, பிற மாணவிகள் அனைவரும் சிரித்தனர். ரம்யா சற்றுத் தயங்கியவாறே “ஞாயிற்றுக்கிழமை” என்று சொல்லவும், “நாயடி பேயடி படும் மோசமான வாழ்க்கை” என்று வாணி சிரிக்க, அனைவரும் கொல்லென சிரித்தனர். ரம்யாவின் முகம் வாட, தேவி அவளின் தோளில் தட்டி, இதெல்லாம் சும்மா என்றவாறு சைகை காட்டினாள். உன் கையெழுத்து அழகா இருக்கு ஆஹோ ஓஹோன்னு மேம்லாம் பாராட்டுறாங்க. ஊர்ப்பக்கம் சொல்வாங்க, கையெழுத்து நல்லாயிருந்தா தலையெழுத்து நல்லாவே இருக்காதாம். உன் தலையெழுத்து என்னவா இருக்கப் போகுதோ என்று ரதி திரும்பவும் கிண்டலாகச் சொல்ல, அனைவரும் மீண்டும் சிரித்தனர்.
கண்மணி தன்னைக் காண லேபிற்கு வந்து வெளியில் நிற்பதைக் கண்டதும், ரம்யா எழுந்து சென்றாள். கண்மணியிடம் எலெக்ட்ரானிக்ஸ் அண்ட் கம்யூனிகேஷன் சம்பந்தமாக ஒரு புத்தகம் கேட்டிருந்தாள், அதைக் கொடுக்கவே கண்மணி நேரில் தேடி வந்திருந்தாள். ரம்யாவின் தொங்கிய முகத்தைக் கண்ட கண்மணி என்னவென்று கேட்க, ஒண்ணுமில்லை என்றே சாதித்தாள் ரம்யா. கண்மணியுடன் சற்று நேரம் ரம்யா லேபுக்கு வெளியில் பேசிக் கொண்டிருக்க, தேவி ரதியிடமும் வாணியிடமும் “ஏண்டி நீங்க ரெண்டு பேரும் சேர்ந்துட்டு ரம்யாவைக் காயப்படுத்திப் பார்க்கிறீங்க? அவளை என் இப்படிலாம் சொல்றீங்க? என்று கேட்கவும், “ எதுக்கு நாங்க அவளை ஒன்னும் சொல்லக்கூடாதோ?ஏன் அவ என்ன பெரிய இவளா, கையெழுத்து அழகா எழுதிட்டா, நாலு ப்ரோக்ராம் போட்டா, அவ மட்டும் தான் புத்திசாலியா, என்ன பெரிய படிப்பு, இப்பவே லவ்வு, கிவ்வுனு காலேஜ்ல டிசிப்ளின் இல்லாம இருக்கா, அவளைப் போய் மேம், சாரெல்லாம் பாராட்டிட்டு! போவியா! என்றார்கள். இதுல நீ வேற கைரேகை பார்த்து அவளை இன்னும் ஏத்தி விடுற என்று ரதி குத்தலாக சொல்லவும், “உண்மையில் அவள் சொன்ன பதில்களுக்கு எஸ்னு வேற எழுத்து தான் வந்தது அவ மனசு கஷ்டப்படக்கூடாது என்று தான் டின்னு சொன்னேன்!” என்றாள். நீ என்ன வேணா சொல்லிக்கோ, நாங்க எங்க இஷ்டப்படி தான் பேசுவோம் என்றார்கள் ரதியும் வாணியும். கண்மணியை அனுப்பிவிட்டு உள்ளே நுழைந்த ரம்யாவின் காதில் அவர்களின் உரையாடலில் வந்த இறுதி வார்த்தைகள் விழுந்தது. தேவி தன்னைச் சமாதானப்படுத்தும் விதமாய் எழுத்தை மாற்றிக்